உடுமலையில் அரசு விடுமுறையை பயன்படுத்தி கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை: திருவிழா போல் குவிந்த குடிமகன்கள்

உடுமலையில் மிலாடி நபி விடுமுறையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால், கள்ளச்சந்தையில் இருமடங்கு விலைக்கு மதுபானம் விற்கப்பட்டது. இதனால் பேருந்து நிலையம் அருகே பெரும் கூட்டம் குவிந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் மிலாடி நபி அரசு விடுமுறையை முன்னிட்டு டாஸ்மாக் அரசு மதுபானக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதனை வாய்ப்பாகப் பயன்படுத்தி உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசு மதுபானக் கடை எண் 2009-ல் உள்ள பாரில் அரசு மதுபானங்கள் இருமடங்கு விலைக்கு விற்கப்பட்டது.

மதுபானக் கடைகளுக்கு விடுப்பு விடப்பட்டதால் மதுபானம் தேடி அலைந்த மதுப்பிரியர்கள், மதுபானம் கள்ளச்சந்தையில் விற்கப்படுவது தெரிந்து திருவிழா கூட்டம் போல் கூடினர்.



மத்திய பேருந்து நிலையம் அருகில் இருந்ததாலும், ஒரே இடத்தில் ஏராளமான குடிமகன்கள் கூடியதாலும் வாகன நெரிசல் ஏற்பட்டது. அரசு மதுபானக் கடை திறந்திருந்தால் கூட இவ்வளவு நெரிசலைக் கண்டதில்லை என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெறுவதால் குடிமகன்களின் தொல்லைகளே அதிகரிக்கிறது என்று மது விற்பனை குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தும் காவல்துறை கண்டுகொள்ளவில்லை என பொதுமக்களும் அப்பகுதி வியாபாரிகளும் புலம்பினர்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...