திமுக அரசு தமிழகத்தை போதை கலாச்சாரமாக மாற்றிவிட்டது: பாஜக குற்றச்சாட்டு

பொள்ளாச்சி அருகே பாஜக மகளிர் அணி நிகழ்ச்சியில், திமுக அரசு டாஸ்மாக் கடைகளை மூடுவதாக கூறி, அதிக பார்களை திறந்து தமிழகத்தை போதை கலாச்சாரமாக மாற்றியதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.



Coimbatore: பொள்ளாச்சி அருகே உள்ள கருப்பம்பாளையம் கிராமத்தில் கோவை தெற்கு மாவட்ட பாஜக மகளிர் அணி சார்பில் பிரதமர் மோடி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கோவை தெற்கு மாவட்ட தலைவர் வசந்த ராஜன் கலந்து கொண்டு 200க்கும் மேற்பட்ட பெண்களுக்கு சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார்.



நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய வசந்த ராஜன், கோவை மாவட்டத்தில் ஒரு லட்சம் உறுப்பினர்களை இணைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், தற்போது வரை 16 ஆயிரம் பேர் இணைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், "மூன்று ஆண்டுகால திமுக ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றப்படவில்லை. ஆனைமலையாறு, நல்லாறு திட்டம், தேங்காய் எண்ணெயை நியாய விலை கடைகளில் விநியோகம் செய்வோம் என கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. காயர் தொழிற்சாலைகளை வெள்ளை நிற பட்டியலில் இருந்து லஞ்சம் பெற்றுக் கொண்டு ஆரஞ்சு நிற பட்டியலில் மாற்றியது. எந்தத் தொழில் செய்தாலும் அவர்களுக்கு நெருக்கடியை கொடுத்து லஞ்சம் பெறுவதையே வாடிக்கையாக வைத்துள்ளனர்," என்றார்.

"அரசு மதுபான கடைகளை படிப்படியாக மூடுவதாக சொல்லி விட்டு அதிக அளவில் தனியார் மதுபான கடைகளை திறந்து வருகின்றனர். இதனால் போதை கலாச்சாரம் அதிகரித்து, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கலவரம் போன்ற சட்டம் ஒழுங்கு சீர்கேடு நடைபெற்று வருகிறது. இதை பொறுத்துக் கொள்ள முடியாத மக்கள் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றனர்," என வசந்த ராஜன் குற்றம்சாட்டினார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...