உடுமலையில் பெரியார் பிறந்தநாள் பேனரில் நிர்மலா சீதாராமன் படம் இடம்பெற்றதால் சர்ச்சை

உடுமலையில் பெரியார் 146வது பிறந்தநாளை முன்னிட்டு வைக்கப்பட்ட பேனரில் நிர்மலா சீதாராமன் படம் இடம்பெற்றதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. முற்போக்கு வழக்கறிஞர் கூட்டமைப்பு இந்த பேனரை வைத்துள்ளது.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட கச்சேரி வீதி, பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தந்தை பெரியாரின் 146வது பிறந்த நாளை முன்னிட்டு முற்போக்கு வழக்கறிஞர் கூட்டமைப்பு சார்பில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த பேனர்களில் தமிழகத்தில் சில தினங்களுக்கு முன் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூரணா ஹோட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்ட புகைப்படம் வைக்கப்பட்டுள்ளதால் சர்ச்சை மற்றும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



இது குறித்து முற்போக்கு வழக்கறிஞர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சாதிக் பாஷா கூறுகையில், "மனித குலத்திற்கு எதிரான சாதி மத அதிகார ஆணவங்களின் வேர் அறுக்க உறுதிமொழி ஏற்போம் என்ற பெரியாரின் 146ஆவது பிறந்தநாளில் அனைவரும் உறுதிமொழி ஏற்போம். சமீபத்தில் ஜிஎஸ்டி கருத்து கேட்பு கூட்டத்தில் கருத்து தெரிவித்த அன்னபூர்ணா ஹோட்டல் அதிபர் சீனிவாசன் அவர்களை அவமதிக்கும் விதமாக சாதிய வன்முறையுடன் செயல்பட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களின் புகைப்படத்தை தொடர்புபடுத்தி பிறந்தநாள் பரப்புரை செய்தி வெளியிட்டுள்ளோம்," என்று தெரிவித்தார்.

உடுமலை பகுதியில் தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்தநாளில் வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனரில் நிர்மலா சீதாராமன் இருக்கும் படம் தற்போது உடுமலை பகுதியில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

Newsletter

கவுண்டம்பாளையம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சூர்யா பிரகாஷ் அறிவிப்பு

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியின் கீழ் போட்டியிடும் காங்கிரஸ் க...

ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் பெங்களூருவில் மாபெரும் சந்திப்பு

பெங்களூரு மடிவாலாவில் SRIT Alumni Connect 2K26 நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு துறைகள் மற்றும் ஆண்டுகளைச் சேர்ந்த 1...

சென்னை-கோவை விமானக் கட்டணம் ரூ.16,500 ஆக உயர்வு: தொடர் விடுமுறை காரணம்

புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக சென்னை-கோவை விமான கட்டணம் ரூ.4,966-இலிருந்து ரூ.16,496 ஆக பல...

காரமடை சின்ன தொட்டிபாளையத்தில் புனித வெள்ளி ஊர்வலத்தில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

காரமடை சின்ன தொட்டிபாளையத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு இயேசுவின் ஊர்வலம் நடைபெற்றது. இயேசு சிலுவையைச் சுமந்து செல்லும்...

ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நெசவாளர்கள் கூட்டமைப்பு - இலவச மின்சாரம் வேண்டும்

ஈரோட்டில் தமிழக நெசவாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலின் சந்தித்து மனு அளித்தனர். கைத்தறி மற்றும் விசைத்தறி...

நெசவாளர்கள் சங்க நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து இலவச மின்சாரம் வழங்க மனு

Erode மாவட்டத்தில் முதல்வர் Stalin ஐ சந்தித்த தமிழ்நாடு நெசவாளர்கள் சங்க நிர்வாகிகள், தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்ற இ...