பெரியாரின் 146வது பிறந்தநாள்: கோவையில் திமுகவினர் மரியாதை

கோவை காந்திபுரத்தில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து திமுகவினர் மரியாதை செலுத்தினர். ஆனைமலையில் திமுக சார்பில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.


Coimbatore: பெரியாரின் 146வது பிறந்தநாளையொட்டி கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியாரின் சிலைக்கு திமுக மாநகர் மாவட்ட துணைச்செயலாளர் கோட்டை அப்பாஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை இன்று (செப்.17) செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருஷ்ணன், திமுக பகுதி கழக செயலாளர் பசுபதி, வழக்கறிஞர் கணேஷ்குமார், அன்புசெழியன் மற்றும் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

அதேநேரம், கோவை மாவட்டம் ஆனைமலை முக்கோணத்தில் திமுக கட்சியின் சார்பாக பெரியாரின் 146வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பெரியாரின் திருவுருவப் படத்திற்கு ஆனைமலை நகரச் செயலாளர் டாக்டர் ஏ.பி.செந்தில்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

ஆனைமலை நிகழ்வில் நகரத் துணைச் செயலாளர் ஏ.அபுதாஹீர் மற்றும் பல உடன்பிறப்புகள் திரளாகக் கலந்து கொண்டனர். இவ்வாறு கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெரியாரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...