பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி மேட்டுப்பாளையத்தில் இலவச மருத்துவ முகாம்: மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தொடங்கி வைத்தார்

பிரதமர் நரேந்திர மோடியின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் இலவச மருத்துவ மற்றும் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. மத்திய இணை அமைச்சர் எல். முருகன் முகாமை தொடங்கி வைத்தார்.



கோவை: பிரதமர் நரேந்திர மோடியின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தொடங்கி வைத்தார்.

மேட்டுப்பாளையத்தில் உள்ள ஹிந்துஸ்தான் மருத்துவமனை மற்றும் ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை இணைந்து இந்த இலவச பொது மற்றும் கண் பரிசோதனை மருத்துவ முகாமை ஏற்பாடு செய்திருந்தன.



முகாமை தொடங்கி வைத்த பின்னர், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் அங்கிருந்த மருத்துவர்களிடம் மருத்துவ பரிசோதனை குறித்து கேட்டறிந்தார்.



மேலும், அவரும் கண் பரிசோதனை செய்து கொண்டார்.

முகாமில் பங்கேற்ற பொதுமக்களிடமும் அமைச்சர் மருத்துவ பரிசோதனை குறித்து கேட்டறிந்தார். இந்த முகாம் மூலம் பல மக்கள் பயனடைந்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...