கோவையில் இருந்து அபுதாபிக்கான இண்டிகோ நேரடி விமான சேவை அட்டவணை மாற்றம்

கோவையில் இருந்து அபுதாபிக்கான இண்டிகோ நேரடி விமான சேவை அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய அட்டவணை படி, கோவையில் இருந்து அபுதாபி செல்லும் விமானம் காலை 10:40 மணிக்கு புறப்பட்டு மதியம் 1:40 மணிக்கு சென்றடையும்.


கோவை: கோவையில் இருந்து அபுதாபிக்கான இண்டிகோ நேரடி விமான சேவை அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.



புதிய அட்டவணை படி, கோவையில் இருந்து அபுதாபி செல்லும் விமானம் காலை 10:40 மணிக்கு புறப்பட்டு மதியம் 1:40 மணிக்கு சென்றடையும்.



ஆனால், அபுதாபியில் இருந்து கோவை வரும் விமான நேரம் மாற்றமின்றி அதிகாலை 1:05 மணிக்கு புறப்பட்டு காலை 6:35 மணிக்கு வந்தடையும்.

இண்டிகோ விமான நிறுவனம் நவம்பர் மாதம் முதல் மார்ச் 2025 வரை டிக்கெட் முன்பதிவுகளை தொடங்கியுள்ளது. இந்த சேவை குளிர்கால அட்டவணையில் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குளிர்கால அட்டவணை அக்டோபர் 29 முதல் மார்ச் 30 வரை நடைமுறையில் இருக்கும் என இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) அறிவித்துள்ளது.

மேலும், இண்டிகோ விமான நிறுவனம் அக்டோபர் 27 முதல் கோவைக்கும் சிங்கப்பூருக்கும் இடையே தினசரி நேரடி விமான சேவையை தொடங்குவதாக அறிவித்துள்ளது. அதன்படி, கோவையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் இரவு 8:15 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 3:15 மணிக்கு சிங்கப்பூரை சென்றடையும். திரும்பும் விமானம் சிங்கப்பூரில் இருந்து மாலை 4:15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6:10 மணிக்கு கோவையை வந்தடையும்.

கோவையில் இருந்து சிங்கப்பூருக்கான நேரடி விமான சேவைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், கோவையில் இருந்து மற்ற சில சர்வதேச நாடுகளுக்கும் இண்டிகோ விமான சேவையை விரைவில் தொடங்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

Newsletter

கோவையில் ரோட்டராக்ட் கிளப் ஆஃப் கோவை நைட்ஸ் சார்பில் ARENA ஸ்போர்ட்ஸ் மீட்

கோவை வெங்கிட்டாபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கமல்நாதன் நினைவு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தேசிய விளையாட்டு தினத்தை மு...

கோவை வார்டுகள் 12, 13-ல் வளர்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.12 மற்றும் 13க்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் தொட...

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...