கோவையில் இருந்து அபுதாபிக்கான இண்டிகோ நேரடி விமான சேவை அட்டவணை மாற்றம்

கோவையில் இருந்து அபுதாபிக்கான இண்டிகோ நேரடி விமான சேவை அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய அட்டவணை படி, கோவையில் இருந்து அபுதாபி செல்லும் விமானம் காலை 10:40 மணிக்கு புறப்பட்டு மதியம் 1:40 மணிக்கு சென்றடையும்.


கோவை: கோவையில் இருந்து அபுதாபிக்கான இண்டிகோ நேரடி விமான சேவை அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.



புதிய அட்டவணை படி, கோவையில் இருந்து அபுதாபி செல்லும் விமானம் காலை 10:40 மணிக்கு புறப்பட்டு மதியம் 1:40 மணிக்கு சென்றடையும்.



ஆனால், அபுதாபியில் இருந்து கோவை வரும் விமான நேரம் மாற்றமின்றி அதிகாலை 1:05 மணிக்கு புறப்பட்டு காலை 6:35 மணிக்கு வந்தடையும்.

இண்டிகோ விமான நிறுவனம் நவம்பர் மாதம் முதல் மார்ச் 2025 வரை டிக்கெட் முன்பதிவுகளை தொடங்கியுள்ளது. இந்த சேவை குளிர்கால அட்டவணையில் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குளிர்கால அட்டவணை அக்டோபர் 29 முதல் மார்ச் 30 வரை நடைமுறையில் இருக்கும் என இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) அறிவித்துள்ளது.

மேலும், இண்டிகோ விமான நிறுவனம் அக்டோபர் 27 முதல் கோவைக்கும் சிங்கப்பூருக்கும் இடையே தினசரி நேரடி விமான சேவையை தொடங்குவதாக அறிவித்துள்ளது. அதன்படி, கோவையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் இரவு 8:15 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 3:15 மணிக்கு சிங்கப்பூரை சென்றடையும். திரும்பும் விமானம் சிங்கப்பூரில் இருந்து மாலை 4:15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6:10 மணிக்கு கோவையை வந்தடையும்.

கோவையில் இருந்து சிங்கப்பூருக்கான நேரடி விமான சேவைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், கோவையில் இருந்து மற்ற சில சர்வதேச நாடுகளுக்கும் இண்டிகோ விமான சேவையை விரைவில் தொடங்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...