மேட்டுப்பாளையத்தில் 1500 மதரசா மாணவர்கள் பங்கேற்ற மிலாது நபி ஊர்வலம்; இந்து சமுதாய நலச்சங்கம் வரவேற்பு

மேட்டுப்பாளையத்தில் நபிகள் நாயகம் பிறந்தநாளை முன்னிட்டு 1500 மதரசா மாணவர்கள் பங்கேற்ற மிலாது நபி ஊர்வலம் நடைபெற்றது. இந்து சமுதாய நலச்சங்கம் குளிர்பானம் வழங்கி வரவேற்றது.



கோவை: மேட்டுப்பாளையத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் நபிகள் நாயகம் பிறந்தநாளை ஒட்டி 1500 மதரசா பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட மிலாது நபி ஊர்வலம் நடைபெற்றது.

இஸ்லாமிய மக்கள் அதிகம் வாழும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நபிகள் நாயகம் பிறந்தநாளை முன்னிட்டு அதனை கொண்டாடும் விதமாக மிலாது நபி ஊர்வலம் நடைபெற்றது. மேட்டுப்பாளையம் பெரிய பள்ளி வாசல் பகுதியில் இருந்து துவங்கிய இந்த ஊர்வலத்தை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் ஜயூப் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இதனையடுத்து உதகை சாலை, பேருந்து நிலையம், அண்ணாஜீராவ் சாலை என மேட்டுப்பாளையத்தின் முக்கிய சாலைகளின் வழியாக ஊர்வலமாக வந்த மிலாது நபி ஊர்வலம் வலம் வந்து மீண்டும் பெரிய பள்ளிவாசலில் நிறைவடைந்தது.

60 மதரசா பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் 1500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு "நபிகள் நாயகம் வழி நடப்போம்", "இந்தியா எங்கள் தாய்நாடு", "இஸ்லாம் எங்கள் வழிபாடு" என்ற கோஷங்களை எழுப்பி ஊர்வலமாக வந்தனர்.



இந்த மிலாது நபி ஊர்வலத்தில் கலந்து கொண்டு ஊர்வலம் வந்த இஸ்லாமிய பள்ளி நிர்வாகிகள் மற்றும் குழந்தைகளுக்கு மேட்டுப்பாளையம் இந்து சமுதாய நலச்சங்கத்தின் நிர்வாகிகள் தண்ணீர் பாட்டில்கள், குளிர்பானம் உள்ளிட்டவைகளை வழங்கி வரவேற்றனர்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...