கோவை மாநகராட்சியில் குப்பைகளை தரம் பிரிக்கும் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் கோவை மாநகராட்சியில் 100 சதவிகிதம் குப்பைகளை தரம் பிரித்து வழங்கும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், “கோவை மாநகராட்சியில் வரும் ஜூன் மாதம் 5ம் தேதி சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்பட உள்ளதால் மாநகராட்சி பகுதிகளில் 100 சதவிகிதம் குப்பைகளை தரம் பிரித்து வழங்கும் பணி நடைபெற வேண்டும் என்ற குறிக்கோள் வழங்கப்பட்டுள்ளது.

அதன் ஒருபகுதியாக இன்று கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் கோவை மாநகராட்சிப் பகுதிகளில் 100 சதவிகிதம் குப்பைகளை தரம் பிரித்து வழங்கும் பணி குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் 100 சதவிகிதம் குப்பைகளை தரம் பிரிக்க தேவையான உபகரணங்கள், வாகனம், பெட்டிகள் மற்றும் ஆட்கள் ஆகியவை போதிய அளவில் உள்ளனவா அல்லது பற்றாக்குறை உள்ள வார்டுகள் தங்கள் தேவைகளை தெரிவித்து செயல்திட்டம் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், மேற்கண்ட அனைத்து தேவைகளை நிவர்த்தி செய்து 100 சதவிகிதம் குப்பை தரம் பிரித்து வழங்கும் பணி மேற்கொள்ளவும் அனைத்து மண்டல உதவி ஆணையர்கள், மண்டல சுகாதார அலுவலர்கள், ஆய்வாளர்கள், பொறியாளர்கள், ஒருங்கிணைப்பு அலுவலர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து பணிபுரிந்து செயல்திட்டம் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.” இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், அனைத்து மண்டல உதவி ஆணையர்கள், பொறியாளர்கள், மண்டல சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், தன்னார்வ தொண்டு பிரதிநிதிகள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...