பெரிய நெகமத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார் பொள்ளாச்சி எம்பி கே.ஈஸ்வரசாமி

கோவை மாவட்டம் பெரிய நெகமத்தில் ரூ.90 லட்சத்திற்கும் மேலான மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை பொள்ளாச்சி எம்பி கே.ஈஸ்வரசாமி தொடங்கி வைத்தார். சாலைப் பணிகள், சுகாதார நிலையம் மற்றும் சிறுவர் பூங்கா உள்ளிட்ட திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.


Coimbatore: கோவை மாவட்டம் பெரிய நெகமத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி செப்டம்பர் 16 அன்று தொடங்கி வைத்தார்.

ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் பெரிய நெகமம், பல்லடம் சாலை - சந்திராபுரம் சாலை இணைப்பு சாலைக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எம்பி கே.ஈஸ்வரசாமி கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.



இதேபோல, பெரிய நெகமம், காளியப்பன்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில் இருந்து வாய்க்கால் மேடு வரை சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியும் நடைபெற்றது.



கோவை தெற்கு மாவட்டம், நெகமம் பேரூர் கழக பகுதியில் ரூ.72 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நெகமம் பல்லடம் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ சாய் கே.வி.கே ரெசிடென்சியில் சிறுவர் பூங்கா திறப்பு விழா நிகழ்ச்சியையும் எம்பி கே.ஈஸ்வரசாமி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில் திமுக நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...