கோவை - அபுதாபி விமான சேவை: குளிர்கால அட்டவணையில் இடம்பெறாததால் தொடர்வதில் சிக்கல்

கோவை - அபுதாபி இடையேயான இண்டிகோ விமான சேவை குளிர்கால அட்டவணையில் இடம்பெறவில்லை. ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட இந்த சேவை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் அனுமதி கிடைக்கவில்லை என இண்டிகோ தெரிவித்துள்ளது.


Coimbatore: கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு தொடங்கப்பட்ட நேரடி விமான சேவை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் இண்டிகோ விமான நிறுவனம் இந்த சேவையை தொடங்கியது. பல ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு தொடங்கப்பட்ட இந்த சேவை பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

தற்போது வாரத்தில் மூன்று நாட்கள் இந்த சேவை வழங்கப்பட்டு வருகிறது. 186 பயணிகள் பயணிக்கக்கூடிய 'ஏர்பஸ் ஏ320' ரக விமானம் இந்த சேவைக்குப் பயன்படுத்தப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்தில் கோவையில் இருந்து அபுதாபி செல்லும்போது 93 சதவீத பயணிகளுடனும், அபுதாபியில் இருந்து கோவைக்கு வரும்போது 57 சதவீத பயணிகளுடனும் விமானம் இயக்கப்பட்டது.

இந்நிலையில், அக்டோபர் கடைசி வாரத்தில் தொடங்கி மார்ச் கடைசி வாரம் வரை அமல்படுத்தப்படும் குளிர்கால அட்டவணையில் இந்த சேவை இடம்பெறவில்லை. இது விமான பயண ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து இண்டிகோ விமான நிறுவன அதிகாரிகள் கூறுகையில், "கோவை விமான நிலையத்தில் குளிர்கால அட்டவணையில் அபுதாபி விமான சேவைக்கு விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் (DGCA) அனுமதி இதுவரை கிடைக்கவில்லை. இதற்கும் விமான நிறுவனங்களுக்கும் தொடர்பில்லை" என்று தெரிவித்தனர்.

இந்த விமான சேவை தொடர்ந்து இயக்கப்படுமா என்பது குறித்த தெளிவான தகவல் இன்னும் வெளியாகவில்லை. விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் அனுமதி கிடைத்தால் மட்டுமே இந்த சேவையை தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...