கோவை - அபுதாபி விமான சேவை: குளிர்கால அட்டவணையில் இடம்பெறாததால் தொடர்வதில் சிக்கல்

கோவை - அபுதாபி இடையேயான இண்டிகோ விமான சேவை குளிர்கால அட்டவணையில் இடம்பெறவில்லை. ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட இந்த சேவை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் அனுமதி கிடைக்கவில்லை என இண்டிகோ தெரிவித்துள்ளது.


Coimbatore: கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு தொடங்கப்பட்ட நேரடி விமான சேவை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் இண்டிகோ விமான நிறுவனம் இந்த சேவையை தொடங்கியது. பல ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு தொடங்கப்பட்ட இந்த சேவை பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

தற்போது வாரத்தில் மூன்று நாட்கள் இந்த சேவை வழங்கப்பட்டு வருகிறது. 186 பயணிகள் பயணிக்கக்கூடிய 'ஏர்பஸ் ஏ320' ரக விமானம் இந்த சேவைக்குப் பயன்படுத்தப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்தில் கோவையில் இருந்து அபுதாபி செல்லும்போது 93 சதவீத பயணிகளுடனும், அபுதாபியில் இருந்து கோவைக்கு வரும்போது 57 சதவீத பயணிகளுடனும் விமானம் இயக்கப்பட்டது.

இந்நிலையில், அக்டோபர் கடைசி வாரத்தில் தொடங்கி மார்ச் கடைசி வாரம் வரை அமல்படுத்தப்படும் குளிர்கால அட்டவணையில் இந்த சேவை இடம்பெறவில்லை. இது விமான பயண ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து இண்டிகோ விமான நிறுவன அதிகாரிகள் கூறுகையில், "கோவை விமான நிலையத்தில் குளிர்கால அட்டவணையில் அபுதாபி விமான சேவைக்கு விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் (DGCA) அனுமதி இதுவரை கிடைக்கவில்லை. இதற்கும் விமான நிறுவனங்களுக்கும் தொடர்பில்லை" என்று தெரிவித்தனர்.

இந்த விமான சேவை தொடர்ந்து இயக்கப்படுமா என்பது குறித்த தெளிவான தகவல் இன்னும் வெளியாகவில்லை. விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் அனுமதி கிடைத்தால் மட்டுமே இந்த சேவையை தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...