கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளியில் STEM மற்றும் ICT ஆய்வகம் திறப்பு

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் STEM மற்றும் ICT ஆய்வகம் திறப்பு. மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். 15 மாநகராட்சி பள்ளிகளின் மாணவர்கள் பயனடைவர்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட சித்தாபுதூர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள STEM மற்றும் ICT ஆய்வகத்தினை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் அவர்கள் முன்னிலையில், மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள் இன்று (16.09.2024) துவக்கி வைத்து பார்வையிட்டார்கள்.



இந்த ஆய்வகத்தில் STEM (Science Technology Engineering Mathematics - அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) மற்றும் ICT பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு கோயம்புத்தூர் மாநகராட்சியின் 15 பள்ளிகளைச் சேர்ந்த 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு, ஆகஸ்ட் 2024 முதல் ஜூலை 2025 வரை வாரத்திற்கு 1 முதல் 3 பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளது.



இந்த ஆய்வகத்தின் முதன்மை நோக்கம் இளம் விஞ்ஞானிகளை உருவாக்குவதாகும். ICT பேனல் மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கத்துடன் அறிவியல், கணிதம் மற்றும் ரோபாட்டிக்ஸ் ஆகியவற்றில் பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கிய 80க்கும் மேற்பட்ட மாதிரிகள் இந்த ஆய்வகத்தில் உள்ளன. இந்த மாதிரிகள் கருத்தியல் தெளிவைக் கொண்டு வருவதற்கும், குழந்தைகளுக்கான கற்றல் அனுபவத்தை வளர்ப்பதற்கும் துல்லியமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வின்போது, துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், கல்விக்குழு தலைவர் மாலதி நாகராஜ், மாமன்ற உறுப்பினர் வித்யா ராமநாதன், மாநகர கல்வி அலுவலர் குணசேகரன், உதவி ஆணையர் செந்தில்குமரன், செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், STEM மற்றும் ICT நிறுவன அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...