உடுமலை அருகே விபத்தில் காயமடைந்தவருக்கு உடுமலை எம்எல்ஏ உதவி - வீடியோ வைரல்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பொன்னேரியில் நேற்று இரவு நடந்த சாலை விபத்தில் காயமடைந்த வீரக்குமாருக்கு உடுமலை எம்எல்ஏ கே. ராதாகிருஷ்ணன் உதவி செய்தார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பொன்னேரி பகுதியில் நேற்று இரவு சாலை விபத்து ஒன்று நடந்தது. இந்த விபத்தில் குடிமங்கலம் பகுதியைச் சேர்ந்த வீரக்குமார் என்பவர் படுகாயமடைந்தார்.

இந்நிலையில், திருப்பூரில் இருந்து உடுமலை நோக்கி வந்து கொண்டிருந்த உடுமலை சட்டமன்ற உறுப்பினர் கே. ராதாகிருஷ்ணன், விபத்து நடந்த இடத்தில் தனது வாகனத்தை நிறுத்தினார். உடனடியாக காரிலிருந்து இறங்கிய அவர், அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்தார்.

பின்னர், காயமடைந்த வீரக்குமாரை உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், மருத்துவமனையின் தலைமை மருத்துவரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, காயமடைந்தவருக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...