வால்பாறையில் விநாயகர் சதுர்த்தி விழா: 108 சிலைகள் ஊர்வலம் மற்றும் கரைப்பு

கோவை மாவட்டம் வால்பாறையில் விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாட 108 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, நடுமலை ஆற்றில் கரைக்கப்பட்டன. இந்து முன்னணியின் 33வது ஆண்டு கொண்டாட்டமாக இந்நிகழ்வு நடைபெற்றது.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடும் வகையில், 108 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, நடுமலை ஆற்றில் கரைக்கப்பட்டன. இந்து முன்னணியின் சார்பில் 33வது ஆண்டாக இந்த விழா கொண்டாடப்பட்டது.

வால்பாறை மற்றும் எஸ்டேட் பகுதிகளில் 108 விநாயகர் சிலைகள் வால்பாறை சுப்பிரமணி திருக்கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டன.



பின்னர், இந்த சிலைகள் வாகனங்களில் ஏற்றப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.



ஊர்வலம் வால்பாறை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் முன்பு துவங்கி, காந்தி சிலை வழியாக வாழைத்தோட்டம், புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகள் வழியாகச் சென்றது.



பின்னர் மீண்டும் சுப்பிரமணியம் கோவில் வளாகத்தின் வழியாக நடுமலை ஆற்றை அடைந்தது. அங்கு சிலைகள் கரைக்கப்பட்டன.



இந்நிகழ்வில் இந்து முன்னணி தெற்கு மாவட்ட துணைத் தலைவர் சேகர் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக ராஜேஷ் (மாநில அமைப்பாளர்), C M அண்ணா துறை மாநில செயலாளர், T. பாலச்சந்திரன் (கோவை கோட்ட செயலாளர்) மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...