மேட்டுப்பாளையம் அருகே கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தையை பிடிக்க வனத்துறை முயற்சி

மேட்டுப்பாளையம் அருகே அறிவொளி நகரில் கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர். மக்கள் அச்சத்தில் உள்ளனர்.



Coimbatore: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள அறிவொளி நகர் பகுதியில் கடந்த சில மாதங்களாக சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

சிறுமுகை வனச்சரக பகுதியான சென்னா மலை கரடு வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள், மலை அடிவார பகுதியான அறிவொளி நகர் பகுதியில் பொதுமக்கள் வளர்த்து வரும் கால்நடைகளை வேட்டையாடி வருகின்றன. ஆடு, மாடு போன்ற கால்நடைகளை அடிக்கடி வேட்டையாடுவதால், மனிதர்களை தாக்கும் முன் சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.



இந்நிலையில், சிறுமுகை வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்துள்ளனர். அறிவொளி நகர் பகுதியில் உள்ள மலை அடிவாரத்தில், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட கூண்டில் நாய்களை வைத்து சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த முயற்சி வெற்றி பெற்றால், அப்பகுதி மக்களின் அச்சம் நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வனத்துறையினரின் இந்த நடவடிக்கை குறித்து அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...