சின்னியம்பாளையம் தங்கும் விடுதியில் காதலி கொலை: காதலன் கைது

கோவை சின்னியம்பாளையத்தில் உள்ள தங்கும் விடுதியில் காதலி கொலை செய்யப்பட்டார். காதலன் சரவணன் கைது செய்யப்பட்டார். இருவரும் அண்ணன் தங்கை உறவுமுறையில் இருந்தது தெரிய வந்துள்ளது.


Coimbatore: கோவை சின்னியம்பாளையத்தில் உள்ள தங்கும் விடுதியில் காதலி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சின்னியம்பாளையத்தில் உள்ள விடுதிக்கு செப்டம்பர் 13 அன்று ஒரு பெண்ணுடன் இளைஞரும் வந்து தங்கினர். மறுநாள் அதிகாலை இளைஞர் மட்டும் வேகமாக விடுதியை விட்டு வெளியேறியதை கண்ட விடுதி ஊழியர்கள் சந்தேகம் அடைந்தனர். அறையை சோதனையிட்டபோது, இளம்பெண் முகத்தில் காயமடைந்த நிலையில் இறந்து கிடப்பதை கண்டனர்.

உடனடியாக பீளமேடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தி, உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்பகுதியில் சந்தேகத்தின் பேரில் ஒரு வாலிபரை காவல்துறையினர் விசாரித்தனர்.

விசாரணையில், அவர் ஆர்.ஜி. புதூரைச் சேர்ந்த சரவணன் என்பதும், இறந்து கிடந்த பெண் கள்ளபாளையத்தைச் சேர்ந்த கீதா என்பதும் தெரியவந்தது. இருவரும் காதலித்து வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்துள்ளனர். ஆனால், இவர்கள் அண்ணன் தங்கை உறவுமுறையில் இருந்தது தெரியவந்துள்ளது.

இருவரும் அடிக்கடி அறை எடுத்து தங்கி உல்லாசமாக இருந்துள்ளனர். இம்முறை தங்கியிருந்தபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சரவணன், கீதாவின் முகத்தில் குத்தி தலையில் அடித்ததில் கீதா இறந்துள்ளார். சரவணனிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...