கோவை வாகராயம்பாளையத்தில் திமுக கொடியேற்றம் மற்றும் அண்ணா பிறந்தநாள் விழா

கோவை வாகராயம்பாளையத்தில் அண்ணாவின் 116வது பிறந்தநாளையொட்டி திமுக கொடியேற்றம் நடைபெற்றது. கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் கொடியேற்றினார். அண்ணா மற்றும் கலைஞர் சிலைகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.


Coimbatore: கோவை வாகராயம்பாளையத்தில் பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக கொடியேற்ற விழா சிறப்பாக நடைபெற்றது. கோவை தெற்கு மாவட்டம் மோப்பிரிபாளையம் பேரூர் கழகம் சார்பாக வாகராயம்பாளையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 75 அடி உயர கொடிக்கம்பத்தில் திமுக இரு வண்ணக் கொடியினை கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசன் ஏற்றினார்.

தொடர்ந்து, கணியூர் ஊராட்சியில் அமைந்துள்ள கலைஞர் திடலில் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ப.ராஜ்குமார் முன்னிலை வகித்தார்.



அதேவேளையில், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த விழாவில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

பேரறிஞர் அண்ணா தமிழ்நாட்டிற்கு 'தமிழ்நாடு' என பெயர் சூட்டியவர் என்பதும், தென்னாட்டின் பெர்னாட்ஷா என அழைக்கப்படுபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பிறந்தநாள் விழா கோவை மாவட்டத்தில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

Newsletter

வரசித்தி விநாயகருக்கு வெள்ளி கவசம் - ரூ.10 லட்சம் நோட்டுகளால் அலங்காரம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெ...

பர்மிட் தாமதம், கட்டண குழப்பம்: அமைச்சர் மீது ஆம்னி உரிமையாளர்கள் சாடல்

ஆம்னி பேருந்து அதிக கட்டண வசூல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் இன்றுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என உரிமையாளர் சங்கம்...

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...