கோவை வாகராயம்பாளையத்தில் திமுக கொடியேற்றம் மற்றும் அண்ணா பிறந்தநாள் விழா

கோவை வாகராயம்பாளையத்தில் அண்ணாவின் 116வது பிறந்தநாளையொட்டி திமுக கொடியேற்றம் நடைபெற்றது. கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் கொடியேற்றினார். அண்ணா மற்றும் கலைஞர் சிலைகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.


Coimbatore: கோவை வாகராயம்பாளையத்தில் பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக கொடியேற்ற விழா சிறப்பாக நடைபெற்றது. கோவை தெற்கு மாவட்டம் மோப்பிரிபாளையம் பேரூர் கழகம் சார்பாக வாகராயம்பாளையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 75 அடி உயர கொடிக்கம்பத்தில் திமுக இரு வண்ணக் கொடியினை கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசன் ஏற்றினார்.

தொடர்ந்து, கணியூர் ஊராட்சியில் அமைந்துள்ள கலைஞர் திடலில் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ப.ராஜ்குமார் முன்னிலை வகித்தார்.



அதேவேளையில், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த விழாவில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

பேரறிஞர் அண்ணா தமிழ்நாட்டிற்கு 'தமிழ்நாடு' என பெயர் சூட்டியவர் என்பதும், தென்னாட்டின் பெர்னாட்ஷா என அழைக்கப்படுபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பிறந்தநாள் விழா கோவை மாவட்டத்தில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...