கோவையில் சாலை கடக்க தவித்த மாணவிகளுக்கு உதவிய பெண் காவலர்: வைரலாகும் வீடியோ

கோவையில் TNPSC குரூப் 2 தேர்வுக்கு செல்லும் மாணவிகள் இருவர் சாலையைக் கடக்க தவித்தபோது, பெண் காவலர் உதவி செய்த சம்பவம் வீடியோவாக பதிவாகி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.



Coimbatore: கோவையில் TNPSC குரூப் 2 தேர்வுக்கு செல்லும் மாணவிகள் இருவருக்கு பெண் காவலர் ஒருவர் உதவி செய்த சம்பவம் வீடியோவாக பதிவாகி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் 2327 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வுகள் தமிழகம் முழுவதும் நேற்று (செப்டம்பர் 14) நடைபெற்றன. இந்நிலையில், கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தேர்வு மையத்திற்கு கடைசி நேரத்தில் தேர்வெழுத வந்த மாணவிகள் இருவர் சாலையைக் கடக்க முடியாமல் தவித்தனர்.



இதனைக் கவனித்த அங்கிருந்த பெண் காவலர், உடனடியாக ஓடிச்சென்று இரண்டு மாணவிகளையும் சாலையைக் கடந்து அழைத்துச் சென்று தேர்வு மையத்திற்குள் அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் வீடியோவாக பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

பெண் காவலரின் இந்த உதவி செயல் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது. நேரத்தை கருத்தில் கொண்டு மாணவிகளுக்கு உதவி செய்த பெண் காவலரின் செயல் காவல்துறையின் மீதான நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...