கோவையில் சாலை கடக்க தவித்த மாணவிகளுக்கு உதவிய பெண் காவலர்: வைரலாகும் வீடியோ

கோவையில் TNPSC குரூப் 2 தேர்வுக்கு செல்லும் மாணவிகள் இருவர் சாலையைக் கடக்க தவித்தபோது, பெண் காவலர் உதவி செய்த சம்பவம் வீடியோவாக பதிவாகி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.



Coimbatore: கோவையில் TNPSC குரூப் 2 தேர்வுக்கு செல்லும் மாணவிகள் இருவருக்கு பெண் காவலர் ஒருவர் உதவி செய்த சம்பவம் வீடியோவாக பதிவாகி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் 2327 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வுகள் தமிழகம் முழுவதும் நேற்று (செப்டம்பர் 14) நடைபெற்றன. இந்நிலையில், கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தேர்வு மையத்திற்கு கடைசி நேரத்தில் தேர்வெழுத வந்த மாணவிகள் இருவர் சாலையைக் கடக்க முடியாமல் தவித்தனர்.



இதனைக் கவனித்த அங்கிருந்த பெண் காவலர், உடனடியாக ஓடிச்சென்று இரண்டு மாணவிகளையும் சாலையைக் கடந்து அழைத்துச் சென்று தேர்வு மையத்திற்குள் அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் வீடியோவாக பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

பெண் காவலரின் இந்த உதவி செயல் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது. நேரத்தை கருத்தில் கொண்டு மாணவிகளுக்கு உதவி செய்த பெண் காவலரின் செயல் காவல்துறையின் மீதான நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...

கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் சிறப்பான ஓணம் விழா

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை ஓணம் விழா கொண்டாடப்பட்டது. போதைப்...

பேரூர் பகுதியில் 1.10 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை மாவட்ட காவல்துறை பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செ...

மசக்காளிபாளையம் நகராட்சிப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் முதலிடம்

கோயம்புத்தூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கேரம் போட்டியில் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஒற்றையர் மற்று...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் பொள்ளாச்சி பிரதான சாலையில் முட்புதர் அகற்றும் பணி

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 98ல் பொள்ளாச்சி பிரதான சாலை எல்ஐசி காலனி பகுதியில் சாலையோர செடிகள் மற்றும் முட...

கோவை ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி – உயிர் அமைப்பு இடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை வலுப்படுத்த ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மற்றும் உயிர் அமைப்பு இடையே புரிந்துண...