கோவையில் சாலை கடக்க தவித்த மாணவிகளுக்கு உதவிய பெண் காவலர்: வைரலாகும் வீடியோ

கோவையில் TNPSC குரூப் 2 தேர்வுக்கு செல்லும் மாணவிகள் இருவர் சாலையைக் கடக்க தவித்தபோது, பெண் காவலர் உதவி செய்த சம்பவம் வீடியோவாக பதிவாகி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.



Coimbatore: கோவையில் TNPSC குரூப் 2 தேர்வுக்கு செல்லும் மாணவிகள் இருவருக்கு பெண் காவலர் ஒருவர் உதவி செய்த சம்பவம் வீடியோவாக பதிவாகி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் 2327 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வுகள் தமிழகம் முழுவதும் நேற்று (செப்டம்பர் 14) நடைபெற்றன. இந்நிலையில், கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தேர்வு மையத்திற்கு கடைசி நேரத்தில் தேர்வெழுத வந்த மாணவிகள் இருவர் சாலையைக் கடக்க முடியாமல் தவித்தனர்.



இதனைக் கவனித்த அங்கிருந்த பெண் காவலர், உடனடியாக ஓடிச்சென்று இரண்டு மாணவிகளையும் சாலையைக் கடந்து அழைத்துச் சென்று தேர்வு மையத்திற்குள் அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் வீடியோவாக பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

பெண் காவலரின் இந்த உதவி செயல் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது. நேரத்தை கருத்தில் கொண்டு மாணவிகளுக்கு உதவி செய்த பெண் காவலரின் செயல் காவல்துறையின் மீதான நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...