கோவை சரவணம்பட்டி பகுதிகளில் மக்களுக்கு நன்றி தெரிவித்த எம்பி கணபதி ராஜ்குமார்

கோவை எம்பி கணபதி ராஜ்குமார் சரவணம்பட்டி பகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். கோவை வடக்கு மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


கோவை: கோவை கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட சரவணம்பட்டி பகுதி கழகத்தின் 3, 4, 10, 11, 12, 21 ஆகிய வட்டக் கழகங்களில் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்த பொதுமக்களுக்கு கோவை எம்பி கணபதி ராஜ்குமார் நேற்று (செப்டம்பர் 14) நன்றி தெரிவித்தார்.



இந்த நிகழ்ச்சியில் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டமுத்தூர் ரவி, பகுதி கழக செயலாளர் சிரவை சிவா (எ) பழனிசாமி, வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மனோஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.



மேலும், மாமன்ற உறுப்பினர்கள், பகுதிக் கழக மற்றும் வட்டக் கழக நிர்வாகிகள், இந்தியா கூட்டணிக் கட்சி நண்பர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் என பலரும் இந்த நிகழ்ச்சியில் திரளாகக் கலந்து கொண்டனர்.





எம்பி கணபதி ராஜ்குமார் தனது உரையில், "நாடாளுமன்றத் தேர்தலில் எனக்கு வாக்களித்த அனைத்து மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் ஆதரவு எனக்கு மிகுந்த உற்சாகத்தையும், பொறுப்பையும் அளித்துள்ளது. தொடர்ந்து உங்கள் நம்பிக்கைக்கு ஏற்ப செயல்படுவேன்" என்று தெரிவித்தார்.

Newsletter

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B....

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...