கோவை சரவணம்பட்டி பகுதிகளில் மக்களுக்கு நன்றி தெரிவித்த எம்பி கணபதி ராஜ்குமார்

கோவை எம்பி கணபதி ராஜ்குமார் சரவணம்பட்டி பகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். கோவை வடக்கு மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


கோவை: கோவை கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட சரவணம்பட்டி பகுதி கழகத்தின் 3, 4, 10, 11, 12, 21 ஆகிய வட்டக் கழகங்களில் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்த பொதுமக்களுக்கு கோவை எம்பி கணபதி ராஜ்குமார் நேற்று (செப்டம்பர் 14) நன்றி தெரிவித்தார்.



இந்த நிகழ்ச்சியில் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டமுத்தூர் ரவி, பகுதி கழக செயலாளர் சிரவை சிவா (எ) பழனிசாமி, வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மனோஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.



மேலும், மாமன்ற உறுப்பினர்கள், பகுதிக் கழக மற்றும் வட்டக் கழக நிர்வாகிகள், இந்தியா கூட்டணிக் கட்சி நண்பர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் என பலரும் இந்த நிகழ்ச்சியில் திரளாகக் கலந்து கொண்டனர்.





எம்பி கணபதி ராஜ்குமார் தனது உரையில், "நாடாளுமன்றத் தேர்தலில் எனக்கு வாக்களித்த அனைத்து மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் ஆதரவு எனக்கு மிகுந்த உற்சாகத்தையும், பொறுப்பையும் அளித்துள்ளது. தொடர்ந்து உங்கள் நம்பிக்கைக்கு ஏற்ப செயல்படுவேன்" என்று தெரிவித்தார்.

Newsletter

சட்டமன்றத்தின் சிம்மக் குரல் வானதி அக்கா; மீண்டும் வாய்ப்பு கொடுங்கள்: கோவையில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ..!

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி வடவள்ளி பகுதியில் பிரச்சா...

கோவை திமுகவின் கோட்டையாக மாறப்போகிறது; முதல்வர் கொடுத்த பொறுப்பை செந்தில் பாலாஜி சிறப்பாக நிறைவேற்றுவார்: கோவையில் கமல்ஹாசன் பரப்புரை..!

கோவை ராஜவீதியில், கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவி...

கோவை வடக்கில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரசாரம்; மலையாளி வாக்காளர்களிடம் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு கோரல்

கோவை வடக்கு தொகுதியில் ஈழுவ சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி கலந்துகொண்டு NDA...

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...