கோவை சரவணம்பட்டி பகுதிகளில் மக்களுக்கு நன்றி தெரிவித்த எம்பி கணபதி ராஜ்குமார்

கோவை எம்பி கணபதி ராஜ்குமார் சரவணம்பட்டி பகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். கோவை வடக்கு மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


கோவை: கோவை கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட சரவணம்பட்டி பகுதி கழகத்தின் 3, 4, 10, 11, 12, 21 ஆகிய வட்டக் கழகங்களில் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்த பொதுமக்களுக்கு கோவை எம்பி கணபதி ராஜ்குமார் நேற்று (செப்டம்பர் 14) நன்றி தெரிவித்தார்.



இந்த நிகழ்ச்சியில் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டமுத்தூர் ரவி, பகுதி கழக செயலாளர் சிரவை சிவா (எ) பழனிசாமி, வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மனோஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.



மேலும், மாமன்ற உறுப்பினர்கள், பகுதிக் கழக மற்றும் வட்டக் கழக நிர்வாகிகள், இந்தியா கூட்டணிக் கட்சி நண்பர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் என பலரும் இந்த நிகழ்ச்சியில் திரளாகக் கலந்து கொண்டனர்.





எம்பி கணபதி ராஜ்குமார் தனது உரையில், "நாடாளுமன்றத் தேர்தலில் எனக்கு வாக்களித்த அனைத்து மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் ஆதரவு எனக்கு மிகுந்த உற்சாகத்தையும், பொறுப்பையும் அளித்துள்ளது. தொடர்ந்து உங்கள் நம்பிக்கைக்கு ஏற்ப செயல்படுவேன்" என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...