மேட்டுப்பாளையம் அருகே ரூ.14 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார் எம்எல்ஏ ஏகே செல்வராஜ்

மேட்டுப்பாளையம் அருகே இலுப்பநத்தம் ஊராட்சியில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை சட்டமன்ற உறுப்பினர் ஏகே செல்வராஜ் திறந்து வைத்தார். குழந்தைகளுக்கான வசதிகளுடன் கூடிய இந்த மையம் பெற்றோர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.



Coimbatore: கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இலுப்பநத்தம் ஊராட்சியில் ஒன்றிய பொது நிதியின் கீழ் 14 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிதாக அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. இப்பணிகள் முழுவதுமாக முடிவுற்ற நிலையில், அதனை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏகே செல்வராஜ் கலந்துகொண்டு புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, அங்கன்வாடி மையத்தில் புதிய பாத்திரத்தில் பால் பொங்கல் வைத்து அங்கன்வாடி பணியாளர்கள் தங்களது பணிகளைத் துவக்கினர். மேலும், அங்கன்வாடி மையத்துக்கு குழந்தைகளை அழைத்து வந்த பெற்றோர்களை வைத்து குத்து விளக்கும் ஏற்றப்பட்டது.



புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் கண்களைக் கவரும் வகையிலும், கவனத்தை ஈர்க்கும் விதமாகவும் விலங்குகள் மற்றும் கார்ட்டூன் படங்கள் சுவர்களில் ஆங்காங்கே வரையப்பட்டுள்ளன. இது குழந்தைகளுக்கு ஒரு மகிழ்ச்சியான கற்றல் சூழலை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் இலுப்பநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கராஜ் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த புதிய அங்கன்வாடி மையம் அப்பகுதி குழந்தைகளின் ஆரம்பகால கல்வி மற்றும் ஊட்டச்சத்து தேவைகளை நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...