திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது - இந்து முன்னேற்ற கழக தலைவர் கோபிநாத்

திருப்பூரில் இந்து முன்னேற்ற கழக மாநில தலைவர் கோபிநாத் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று கூறினார். பொதுமக்கள் இன்னல்கள், வியாபாரிகள் மிரட்டல், சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஆகியவற்றை சுட்டிக்காட்டினார்.



திருப்பூர்: திருப்பூரில் இந்து முன்னேற்ற கழக மாநில தலைவர் வழக்கறிஞர் கோபிநாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

"திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது. இந்து முன்னணி சார்பில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் மூலம் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். குறிப்பாக வியாபாரிகள் மிரட்டப்படுகிறார்கள்."

"இது தவிர பல்வேறு பகுதிகளில் அடிதடி சம்பவங்கள் உள்ளிட்ட சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் நடைபெறுகிறது. இந்து முன்னணி கட்சியில் உள்ள இளைஞர்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறார்கள்."

மேலும் அவர், "நடிகர் விஜய் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காதது கண்டிக்கத்தக்கது" என்றும் கூறினார்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...

கடன் தள்ளுபடி செய்யும் வரை வங்கிக் கடன் கட்ட மறுப்பு: கோவையில் விவசாயிகள் சங்கம் தீர்மானம்

சோமையனூரில் ஜாதி, மதம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி முழுமைய...

துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க விழிப்புணர்வு பேரணி

Coimbatore மாநகராட்சி வடக்கு மண்டலத்தின் துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்ற...