வால்பாறை அருகே குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள்; அச்சத்தில் மக்கள்

வால்பாறை அருகே சோலையார் எஸ்டேட் பகுதியில் இரண்டு காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தன. பகல் நேரத்தில் யானைகள் சுற்றித் திரிவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சோலையார் எஸ்டேட் பகுதியில் இரண்டு காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து சுற்றித் திரிந்ததால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இன்று மதியம் பட்டப்பகலில் இரண்டு காட்டு யானைகள் சோலையார் எஸ்டேட் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தன. அங்குள்ள வாழை மரங்களை சாப்பிட்ட பின், தேயிலை தோட்டம் வழியாக பிரதான சாலையைக் கடந்து மீண்டும் குடியிருப்பு வழியாகச் சென்று, தேயிலை தோட்டத்தில் நின்றன.

இதைப் பார்த்த பொதுமக்கள் பெரும் அச்சம் அடைந்தனர். தகவல் அறிந்த மானாம்பள்ளி வனத்துறையினர் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்து, இரண்டு யானைகளையும் வனப் பகுதிக்கு விரட்டினர்.

காட்டு யானைகள் பகல் நேரத்தில் குடியிருப்பு பகுதியில் சுற்றி வருவதால் மக்கள் தொடர்ந்து அச்சத்தில் உள்ளனர். இந்த யானைகளை நிரந்தரமாக வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...

மேற்காசிய போர் நெருக்கடியை எதிர்கொள்ளும் வலிமை இந்தியாவுக்கு உண்டு - வானதி சீனிவாசன்

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மேற்காசிய போர் நெருக்கடியை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொள்கிறது என்றும், ம...