வால்பாறை அருகே குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள்; அச்சத்தில் மக்கள்

வால்பாறை அருகே சோலையார் எஸ்டேட் பகுதியில் இரண்டு காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தன. பகல் நேரத்தில் யானைகள் சுற்றித் திரிவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சோலையார் எஸ்டேட் பகுதியில் இரண்டு காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து சுற்றித் திரிந்ததால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இன்று மதியம் பட்டப்பகலில் இரண்டு காட்டு யானைகள் சோலையார் எஸ்டேட் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தன. அங்குள்ள வாழை மரங்களை சாப்பிட்ட பின், தேயிலை தோட்டம் வழியாக பிரதான சாலையைக் கடந்து மீண்டும் குடியிருப்பு வழியாகச் சென்று, தேயிலை தோட்டத்தில் நின்றன.

இதைப் பார்த்த பொதுமக்கள் பெரும் அச்சம் அடைந்தனர். தகவல் அறிந்த மானாம்பள்ளி வனத்துறையினர் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்து, இரண்டு யானைகளையும் வனப் பகுதிக்கு விரட்டினர்.

காட்டு யானைகள் பகல் நேரத்தில் குடியிருப்பு பகுதியில் சுற்றி வருவதால் மக்கள் தொடர்ந்து அச்சத்தில் உள்ளனர். இந்த யானைகளை நிரந்தரமாக வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...