செத்தால் தான் குண்டு குழியை மூடுவீர்களா? - மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு பாதாள சாக்கடை திட்டம், சாலைகள் சீரமைப்பு, குப்பை வரி ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.



Coimbatore: கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாதாள சாக்கடை திட்டத்தை உடனடியாக அமல்படுத்துதல், மாவட்டம் முழுவதும் சாலைகள் மற்றும் மழைநீர் வடிகால்களை சீரமைத்தல், குப்பை வரியை ரத்து செய்தல், வீடுகளில் தினசரி குப்பை சேகரிப்பை உறுதி செய்தல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

போராட்டத்தின்போது மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. மார்க்சிஸ்ட் கட்சியினர் பேசுகையில், "கடந்த ஆட்சியில் மக்கள் வரிப்பணத்தை எஸ்பி வேலுமணி சூறையாடினார். ஓம் காளி! ஜெய் காளி! மாநகராட்சி கஜானா காலி! என்றாகிவிட்டது. இந்த முறை மாநகராட்சி கஜானாவை யார் காலி செய்து வருகிறார் என்று தெரியவில்லை. மார்க்சிஸ்ட் கட்சி ஒருபோதும் அதை அனுமதிக்காது" என்று குற்றம்சாட்டினர்.



"சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திற்கு அருகில் தோண்டப்பட்ட குழியில் மூவர் விழுந்ததும் உடனடியாக அந்த குழி மூடப்பட்டது. செத்தால் தான் குண்டு குழியை மூடுவீர்களா?" என்று கேள்வி எழுப்பினர்.

நூற்றுக்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.



"விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் தீவிரமாகும்" என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த போராட்டக்காரர்கள் அதிகாரிகளிடம் எச்சரித்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...