உடுமலையில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சிபிஐஎம் சார்பில் சங்கு ஊதும் போராட்டம்

உடுமலையில் பொதுமக்கள் பயன்படுத்திய பாதை மூடப்பட்டதை எதிர்த்து சிபிஐஎம் கட்சியினர் சங்கு ஊதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சிபிஐஎம் கட்சி சார்பில் சங்கு ஊதும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

உடுமலை பழனி சாலையில் நகராட்சி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு நிதியின் கீழ் நான்கு கோடி ரூபாய் மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இதன் அருகில் உள்ள யசோதா ராமலிங்கம் லே-அவுட்டை இணைக்கும் பாதையை பல ஆண்டு காலமாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது புதிய பேருந்து நிலையம் கட்டப்படுவதால் இந்த பாதை மறைக்கப்பட்டு சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது.



பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்ட இந்த பாதையை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தும், அது நிறைவேற்றப்படவில்லை. மேலும், கழுத்தறுத்தான் ஓடையை மறைத்து வீட்டு மனையாக மாற்றுவதையும் போராட்டக்காரர்கள் கண்டித்தனர்.

மகாகவி பாரதியார் நினைவு நாளான செப்டம்பர் 11 அன்று நடைபெற்ற இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், பொதுமக்கள் பயன்படுத்திய பாதையை உடனடியாக திறக்க வேண்டும் என்றும், இல்லையெனில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் எச்சரித்தனர்.

Newsletter

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...

பொதுமக்களை விரட்டிய காங்கேயம் காளை; மரத்தில் ஏறி உயிர்தப்பிய வாலிபர்கள்.

கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு சுற்றித் திரிந்த காங்கேயம் காளை ஒன்று திடீரென பொதுமக்களை விரட்டியதில், பய...