உடுமலையில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சிபிஐஎம் சார்பில் சங்கு ஊதும் போராட்டம்

உடுமலையில் பொதுமக்கள் பயன்படுத்திய பாதை மூடப்பட்டதை எதிர்த்து சிபிஐஎம் கட்சியினர் சங்கு ஊதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சிபிஐஎம் கட்சி சார்பில் சங்கு ஊதும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

உடுமலை பழனி சாலையில் நகராட்சி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு நிதியின் கீழ் நான்கு கோடி ரூபாய் மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இதன் அருகில் உள்ள யசோதா ராமலிங்கம் லே-அவுட்டை இணைக்கும் பாதையை பல ஆண்டு காலமாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது புதிய பேருந்து நிலையம் கட்டப்படுவதால் இந்த பாதை மறைக்கப்பட்டு சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது.



பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்ட இந்த பாதையை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தும், அது நிறைவேற்றப்படவில்லை. மேலும், கழுத்தறுத்தான் ஓடையை மறைத்து வீட்டு மனையாக மாற்றுவதையும் போராட்டக்காரர்கள் கண்டித்தனர்.

மகாகவி பாரதியார் நினைவு நாளான செப்டம்பர் 11 அன்று நடைபெற்ற இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், பொதுமக்கள் பயன்படுத்திய பாதையை உடனடியாக திறக்க வேண்டும் என்றும், இல்லையெனில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் எச்சரித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...