உடுமலையில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சிபிஐஎம் சார்பில் சங்கு ஊதும் போராட்டம்

உடுமலையில் பொதுமக்கள் பயன்படுத்திய பாதை மூடப்பட்டதை எதிர்த்து சிபிஐஎம் கட்சியினர் சங்கு ஊதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சிபிஐஎம் கட்சி சார்பில் சங்கு ஊதும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

உடுமலை பழனி சாலையில் நகராட்சி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு நிதியின் கீழ் நான்கு கோடி ரூபாய் மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இதன் அருகில் உள்ள யசோதா ராமலிங்கம் லே-அவுட்டை இணைக்கும் பாதையை பல ஆண்டு காலமாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது புதிய பேருந்து நிலையம் கட்டப்படுவதால் இந்த பாதை மறைக்கப்பட்டு சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது.



பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்ட இந்த பாதையை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தும், அது நிறைவேற்றப்படவில்லை. மேலும், கழுத்தறுத்தான் ஓடையை மறைத்து வீட்டு மனையாக மாற்றுவதையும் போராட்டக்காரர்கள் கண்டித்தனர்.

மகாகவி பாரதியார் நினைவு நாளான செப்டம்பர் 11 அன்று நடைபெற்ற இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், பொதுமக்கள் பயன்படுத்திய பாதையை உடனடியாக திறக்க வேண்டும் என்றும், இல்லையெனில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் எச்சரித்தனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...