காட்டு யானை தாக்கியதில் நடைப்பயிற்சி செல்லும் நபர் படுகாயம்: கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை

கோவை மாவட்டம் காளையனூர் பகுதியில் நடைப்பயிற்சி சென்ற கணேசன் என்பவரை காட்டு யானை தாக்கி படுகாயமடைந்தார். காயமடைந்தவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


Coimbatore: கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான மருதமலை, ஓணாப்பாளையம், தாளியூர், கெம்பனூர், வண்டிக்காரனூர், குப்பேபாளையம், விராலியூர், ஆலாந்துறை, கணுவாய், தடாகம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டுயானைகள் கூட்டம் கூட்டமாகவும், குட்டிகளுடனும் குடியிருப்பு பகுதிகளை முற்றுகையிட்டு வருகின்றன.

முன்னர் விளைநிலங்களுக்குள் புகுந்து தென்னங்குருத்து, பாக்கு, அரசாணிக்காய், தக்காளி, சோளக்கதிர் போன்றவற்றை உண்டும், மிதித்தும் நாசம் செய்து வந்த யானைகள், தற்போது விளைநிலங்களைச் சுற்றிலும் சோலார் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளதால், கிராமங்களுக்குள் நுழைந்து வீதிகளில் உலா வருகின்றன. மேலும் ரேஷன் கடையில் உள்ள அரிசிகளை குறி வைத்து நள்ளிரவில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

நேற்று (செப்டம்பர் 10) இரவு தடாகம் அருகே காளையனூர் பகுதியில் மனோகரன் என்பவரின் தோட்டத்தில் புகுந்த காட்டு யானையை வனத்துறையினர் விரட்டிச் சென்றனர். ஆனால் சிறிது நேரத்தில் அந்த ஒற்றைக் காட்டு யானை மீண்டும் அங்கு திரும்பியது. பின்னர் மீண்டும் வனத்துறையினர் அதனை விரட்டினர்.

இன்று (செப்டம்பர் 11) அதிகாலை 5.30 மணி அளவில் சோமையனூரில் இருந்து காளையனூர் செல்லும் வழியில் நடைப்பயிற்சிக்கு சென்ற கணேசன் என்பவரை அந்த ஒற்றை காட்டு யானை தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவரது கை உடைந்தது.

சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், அப்பகுதியில் கண்காணித்து வந்த வனத்துறை குழுவினர் உடனடியாக அங்கு சென்று காயமடைந்தவரை மீட்டனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தற்போது அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது போன்ற விபத்துகள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க, அந்த யானையை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...