தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது: ஜி.கே.வாசன் கருத்து

உடுமலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தமிழகத்தில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் விற்பனை, பாலியல் சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக வருகை புரிந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், தமிழகத்தில் தற்போது தினமும் பல இடங்களில் கொலை, கொள்ளை, பாலியல் சம்பவம், போதைப் பொருள் விற்பனை என சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவற்றை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்தியாவில் அமைதியாகவும் நேர்மையாகவும் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல் குறித்து வெளிநாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியது ஏற்கக்கூடியதல்ல என்று குறிப்பிட்டார். விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாடு குறித்து பேசும்போது, தமிழ் மாநில காங்கிரஸ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பூரண மதுவிலக்கு குறித்து பல கட்ட போராட்டங்கள் நடத்தியுள்ளதாகவும், பூரண மதுவிலக்கு என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவித்தார்.

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் முக்கிய நீர்ப்பாசனமான பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் உள்ள முறைகேடுகளால் கடைமடை வரை தண்ணீர் கிடைக்காமல் உள்ளதாகவும், தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். உடுமலை, மடத்துக்குளம், பொள்ளாச்சி பகுதியில் தென்னை விவசாயத்தை பாதிக்கும் வாடல் நோய் தாக்குதல் அதிகரித்துள்ளதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

திண்டுக்கல் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் தற்போது மடத்துக்குளம் முதல் பொள்ளாச்சி வரை ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். உடுமலை ரயில் நிலையத்திலிருந்து சென்னை, பெங்களூருக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

நத்தம் வீட்டுமனை பட்டாக்களில் அளவீடு, புல வரைபடம் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் கணினி மயமாக்கப்படாத காரணத்தால் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்து வருவதாகவும், இவற்றை சரி செய்ய வேண்டும் என்றும் கூறினார். தற்சமயம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, கட்சியை பலப்படுத்தும் நோக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும், சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் தாமக மாநிலத் துணைத் தலைவர் விடியல் சேகர், மாநில பொதுச் செயலாளர் யுவராஜா, மேற்கு மண்டல இளைஞர் அணி தலைவர் அபிராமி செந்தில் குமார், திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ரத்தினவேல், திருப்பூர் தெற்கு மாவட்ட பொருளாளர் ஜி.ஆர். செந்தில் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...