தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது: ஜி.கே.வாசன் கருத்து

உடுமலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தமிழகத்தில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் விற்பனை, பாலியல் சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக வருகை புரிந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், தமிழகத்தில் தற்போது தினமும் பல இடங்களில் கொலை, கொள்ளை, பாலியல் சம்பவம், போதைப் பொருள் விற்பனை என சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவற்றை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்தியாவில் அமைதியாகவும் நேர்மையாகவும் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல் குறித்து வெளிநாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியது ஏற்கக்கூடியதல்ல என்று குறிப்பிட்டார். விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாடு குறித்து பேசும்போது, தமிழ் மாநில காங்கிரஸ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பூரண மதுவிலக்கு குறித்து பல கட்ட போராட்டங்கள் நடத்தியுள்ளதாகவும், பூரண மதுவிலக்கு என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவித்தார்.

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் முக்கிய நீர்ப்பாசனமான பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் உள்ள முறைகேடுகளால் கடைமடை வரை தண்ணீர் கிடைக்காமல் உள்ளதாகவும், தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். உடுமலை, மடத்துக்குளம், பொள்ளாச்சி பகுதியில் தென்னை விவசாயத்தை பாதிக்கும் வாடல் நோய் தாக்குதல் அதிகரித்துள்ளதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

திண்டுக்கல் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் தற்போது மடத்துக்குளம் முதல் பொள்ளாச்சி வரை ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். உடுமலை ரயில் நிலையத்திலிருந்து சென்னை, பெங்களூருக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

நத்தம் வீட்டுமனை பட்டாக்களில் அளவீடு, புல வரைபடம் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் கணினி மயமாக்கப்படாத காரணத்தால் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்து வருவதாகவும், இவற்றை சரி செய்ய வேண்டும் என்றும் கூறினார். தற்சமயம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, கட்சியை பலப்படுத்தும் நோக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும், சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் தாமக மாநிலத் துணைத் தலைவர் விடியல் சேகர், மாநில பொதுச் செயலாளர் யுவராஜா, மேற்கு மண்டல இளைஞர் அணி தலைவர் அபிராமி செந்தில் குமார், திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ரத்தினவேல், திருப்பூர் தெற்கு மாவட்ட பொருளாளர் ஜி.ஆர். செந்தில் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

Tragedy in Tiruppur: Conductor Sleeping in Front of Bus Run Over, Killed

A 23-year-old bus conductor was killed in a tragic accident in Tiruppur after a private bus driver allegedly failed to n...

திருப்பூரில் பரிதாபம்: பேருந்து முன்பாக படுத்திருந்ததை கவனிக்காத ஓட்டுனர் – நடத்துனர் பலி.

திருப்பூரில் பேருந்தின் முன்பாக படுத்து உறங்கியிருந்த இளம் நடத்துனர் சூர்யா (23) மீது, ஓட்டுனர் கவனிக்காமல் பேருந்தை இயக...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...