கோவை கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற முன்னாள் டிரைவர்

கோவையில், சுஸ்லான் நிறுவனத்தின் முன்னாள் டிரைவர் நாகராஜ், 2018-ல் ஏற்பட்ட விபத்தில் கால் இழந்தார். இழப்பீடு கிடைக்காததால், கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றார்.



கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒரு முன்னாள் டிரைவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாகராஜ் என்ற இந்த நபர், முன்னதாக சுஸ்லான் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்துள்ளார். 2018 ஆம் ஆண்டு, பணியின் போது ஏற்பட்ட ஒரு விபத்தில் கிரானைட் கல் அவரது கால் மீது விழுந்ததால், வலது கால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக, அவரது வலது காலை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, நிறுவன நிர்வாகம் தரப்பில் இருந்து எந்தவிதமான இழப்பீடும் வழங்கப்படவில்லை என நாகராஜ் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக பல முறை கோரிக்கை விடுத்தும், எந்த பலனும் கிடைக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் ஆதங்கம் அடைந்த நாகராஜ், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு, தனது உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.



இச்சம்பவம் அங்கிருந்தவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



உடனடியாக செயல்பட்ட பாதுகாப்பு பணியாளர்கள், நாகராஜை தடுத்து நிறுத்தினர். பின்னர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாகராஜுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவரது குறைகளை கேட்டறிந்தனர்.

இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...