கோவை வ.உ.சி. மைதானத்தில் பிரம்மாண்ட கடல் கன்னி கண்காட்சி துவக்கம்

கோவை வ.உ.சி. மைதானத்தில் எம்.கே.சி. எண்டர்டெயின்மெண்ட் சார்பாக பிரம்மாண்டமான மரைன் எக்ஸ்போ துவங்கியது. ஒன்றரை இலட்சம் சதுர அடியில் அமைக்கப்பட்ட இந்த கண்காட்சி, மீன் சுரங்கம், கடல் கன்னி மற்றும் வெளிநாட்டு விளையாட்டு அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.



கோவை: கோவை வ.உ.சி. மைதானத்தில் பிரம்மாண்டமான மரைன் எக்ஸ்போ எனும் கடல் கன்னி கண்காட்சி துவங்கியது.



எம்.கே.சி. எண்டர்டெயின்மெண்ட் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்காட்சி குறித்து, நிறுவனத்தின் உரிமையாளர் சிட்டி பாபு மற்றும் சந்திரசேகர் செய்தியாளர்களிடம் விவரங்களை பகிர்ந்து கொண்டனர்.



கோவை மக்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த கண்காட்சி சுமார் ஒன்றரை இலட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அரசு வழிகாட்டுதல்களின்படி அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். மேலும், ஏராளமான கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கான வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.



கோவையில் இது போன்ற பிரம்மாண்ட கண்காட்சி முதல் முறையாக நடைபெறுவதாக அவர்கள் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.



வெளிநாடுகளில் காணப்படுவது போன்ற இலட்சக்கணக்கான மீன்களைக் கொண்ட சுரங்கங்கள், கடல் கன்னி உள்ளிட்டவை பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை தரும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.



இந்த கண்காட்சியில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

வெளிநாட்டு பிரம்மாண்ட ராட்டினம், உணவு அரங்குகள், ஸ்னோ வேர்ல்ட், பேய் வீடு, 3D கண்காட்சி அரங்குகள் ஆகியவை இதில் அடங்கும். மேலும், உணவுப் பொருட்கள், ஆடைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனைக்கான அரங்குகள் என 50க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்த பிரம்மாண்ட கடல் கன்னி கண்காட்சி கோவை மக்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீன் சுரங்கம், கடல் கன்னி மற்றும் வெளிநாட்டு விளையாட்டு அம்சங்கள் என பல்வேறு வகையான அரங்குகளை கோவை வாழ் மக்கள் காணும் அரிய வாய்ப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...