திருமாவளவன் மது ஒழிப்பு மாநாட்டுக்கு அழைத்தால் பங்கேற்பது குறித்து பரிசீலிப்போம்: அன்புமணி ராமதாஸ்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திருமாவளவனின் மது ஒழிப்பு மாநாடு, தேசிய கல்விக் கொள்கை, போதைப் பொருள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.



கோவை: கோவை விமான நிலையத்தில் செப்டம்பர் 10 அன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து தனது கருத்துக்களை பதிவு செய்தார்.

தேசிய கல்விக் கொள்கை குறித்து பேசிய அவர், "தேசிய கல்வி கொள்கையில் நல்லதும் இருக்கிறது, அதேபோல் மாநிலத்திற்கு பாதகமான அம்சங்களும் உள்ளன. குறிப்பாக மும்மொழிக் கொள்கை உள்ளது. ஆனால் தமிழகத்தில் இரு மொழிக் கொள்கைதான் உள்ளது. எனவே மத்திய அரசு இதைத் திணிக்கக் கூடாது. கல்வி என்பது மாநில பட்டியலுக்கு வர வேண்டும்," என்று வலியுறுத்தினார்.

திமுக ஆட்சிக்கு வந்த பின் போதைப் பொருள் விற்பனை மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டிய அன்புமணி, "காவல்துறைக்கு தெரியாமல் இது நடக்காது. நானும் முதல்வரிடம் பலமுறை சொல்லியிருக்கிறேன். ஆனால் கடமைக்கு முதல்வர் கூட்டம் நடத்தி கண்துடைப்புக்கு சில நடவடிக்கைகள் எடுப்பதாகவும், நேற்று கூட மூன்று கொலைகள் நடந்துள்ளன. இதற்கு காரணம் போதைப் பொருள்தான். முதல்வர் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று கேட்டுக் கொண்டார்.

திருமாவளவனின் மது ஒழிப்பு மாநாடு குறித்து கருத்து தெரிவித்த அவர், "10 வருடம் திமுக கூட்டணியில் இருந்து கொண்டு இப்போதாவது மது ஒழிப்பை திருமாவளவன் ஏற்றுக் கொண்டுள்ளார். திருமாவளவன் மது ஒழிப்பு மாநாட்டுக்கு எங்களை அழைக்கட்டும், அதில் கலந்து கொள்வது குறித்து அப்போது பார்க்கலாம்," என்றார்.

மேலும் அவர், "தமிழக அரசு சாராயத்தில் கவனம் செலுத்தாமல் ஏரிகளைப் பாதுகாக்க வேண்டும், தண்ணீரை சேமிக்க நிதி ஒதுக்க வேண்டும்," என்று கேட்டுக் கொண்டார். "மாணவர்களுக்கு நீதி போதனை மிகவும் அவசியம். அதில் நல்லது இருக்கிறது. குறிப்பாக சமூக சீர்கேடு விஷயங்கள், எது நல்லது, எது கெட்டது என்பதை மாணவர்களுக்கு கற்றுத் தர வேண்டும்," என்றும் தெரிவித்தார்.

விஜய் மாநாட்டுக்கு அனுமதி அளிப்பது குறித்த கேள்விக்கு, "யார் மாநாடு நடத்தினாலும் காவல்துறையினர் இவ்வளவு கேள்விகள் கேட்பார்கள். இது ஒன்றும் பெரிய விஷயமில்லை," என்று அன்புமணி ராமதாஸ் பதிலளித்தார்.

Newsletter

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...