திருமாவளவன் மது ஒழிப்பு மாநாட்டுக்கு அழைத்தால் பங்கேற்பது குறித்து பரிசீலிப்போம்: அன்புமணி ராமதாஸ்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திருமாவளவனின் மது ஒழிப்பு மாநாடு, தேசிய கல்விக் கொள்கை, போதைப் பொருள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.



கோவை: கோவை விமான நிலையத்தில் செப்டம்பர் 10 அன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து தனது கருத்துக்களை பதிவு செய்தார்.

தேசிய கல்விக் கொள்கை குறித்து பேசிய அவர், "தேசிய கல்வி கொள்கையில் நல்லதும் இருக்கிறது, அதேபோல் மாநிலத்திற்கு பாதகமான அம்சங்களும் உள்ளன. குறிப்பாக மும்மொழிக் கொள்கை உள்ளது. ஆனால் தமிழகத்தில் இரு மொழிக் கொள்கைதான் உள்ளது. எனவே மத்திய அரசு இதைத் திணிக்கக் கூடாது. கல்வி என்பது மாநில பட்டியலுக்கு வர வேண்டும்," என்று வலியுறுத்தினார்.

திமுக ஆட்சிக்கு வந்த பின் போதைப் பொருள் விற்பனை மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டிய அன்புமணி, "காவல்துறைக்கு தெரியாமல் இது நடக்காது. நானும் முதல்வரிடம் பலமுறை சொல்லியிருக்கிறேன். ஆனால் கடமைக்கு முதல்வர் கூட்டம் நடத்தி கண்துடைப்புக்கு சில நடவடிக்கைகள் எடுப்பதாகவும், நேற்று கூட மூன்று கொலைகள் நடந்துள்ளன. இதற்கு காரணம் போதைப் பொருள்தான். முதல்வர் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று கேட்டுக் கொண்டார்.

திருமாவளவனின் மது ஒழிப்பு மாநாடு குறித்து கருத்து தெரிவித்த அவர், "10 வருடம் திமுக கூட்டணியில் இருந்து கொண்டு இப்போதாவது மது ஒழிப்பை திருமாவளவன் ஏற்றுக் கொண்டுள்ளார். திருமாவளவன் மது ஒழிப்பு மாநாட்டுக்கு எங்களை அழைக்கட்டும், அதில் கலந்து கொள்வது குறித்து அப்போது பார்க்கலாம்," என்றார்.

மேலும் அவர், "தமிழக அரசு சாராயத்தில் கவனம் செலுத்தாமல் ஏரிகளைப் பாதுகாக்க வேண்டும், தண்ணீரை சேமிக்க நிதி ஒதுக்க வேண்டும்," என்று கேட்டுக் கொண்டார். "மாணவர்களுக்கு நீதி போதனை மிகவும் அவசியம். அதில் நல்லது இருக்கிறது. குறிப்பாக சமூக சீர்கேடு விஷயங்கள், எது நல்லது, எது கெட்டது என்பதை மாணவர்களுக்கு கற்றுத் தர வேண்டும்," என்றும் தெரிவித்தார்.

விஜய் மாநாட்டுக்கு அனுமதி அளிப்பது குறித்த கேள்விக்கு, "யார் மாநாடு நடத்தினாலும் காவல்துறையினர் இவ்வளவு கேள்விகள் கேட்பார்கள். இது ஒன்றும் பெரிய விஷயமில்லை," என்று அன்புமணி ராமதாஸ் பதிலளித்தார்.

Newsletter

நினைத்ததை சாதிக்கும் செயல்வீரர் செந்திலபாலாஜி - கோவையில் முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

கோவையில் நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், மின்துறை அம...

கோவை அதிமுக வேட்பாளர்கள் அண்ணாமலையுடன் சந்திப்பு; வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பு

சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பா...

கோவை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

கோவையில் திமுக வேட்பாளர் அறிமுக பிரச்சாரத்தில் பங்கேற்க வந்த முதலமைச்சர் ஸ்டாலினை விமான நிலையத்தில் கட்சித் தலைவர்களும்...

முதலமைச்சர் இன்று கோவைக்கு வருகை; செந்தில் பாலாஜி ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்

தமிழக முதலமைச்சர் M.K. Stalin இன்று கோவையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார். Avinashi சாலையில்...

பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம், ஏப்ரல் 1 முதல் மே 31 வரை பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக புதன், வியாழன், வெ...

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...