திருமாவளவன் மது ஒழிப்பு மாநாட்டுக்கு அழைத்தால் பங்கேற்பது குறித்து பரிசீலிப்போம்: அன்புமணி ராமதாஸ்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திருமாவளவனின் மது ஒழிப்பு மாநாடு, தேசிய கல்விக் கொள்கை, போதைப் பொருள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.



கோவை: கோவை விமான நிலையத்தில் செப்டம்பர் 10 அன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து தனது கருத்துக்களை பதிவு செய்தார்.

தேசிய கல்விக் கொள்கை குறித்து பேசிய அவர், "தேசிய கல்வி கொள்கையில் நல்லதும் இருக்கிறது, அதேபோல் மாநிலத்திற்கு பாதகமான அம்சங்களும் உள்ளன. குறிப்பாக மும்மொழிக் கொள்கை உள்ளது. ஆனால் தமிழகத்தில் இரு மொழிக் கொள்கைதான் உள்ளது. எனவே மத்திய அரசு இதைத் திணிக்கக் கூடாது. கல்வி என்பது மாநில பட்டியலுக்கு வர வேண்டும்," என்று வலியுறுத்தினார்.

திமுக ஆட்சிக்கு வந்த பின் போதைப் பொருள் விற்பனை மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டிய அன்புமணி, "காவல்துறைக்கு தெரியாமல் இது நடக்காது. நானும் முதல்வரிடம் பலமுறை சொல்லியிருக்கிறேன். ஆனால் கடமைக்கு முதல்வர் கூட்டம் நடத்தி கண்துடைப்புக்கு சில நடவடிக்கைகள் எடுப்பதாகவும், நேற்று கூட மூன்று கொலைகள் நடந்துள்ளன. இதற்கு காரணம் போதைப் பொருள்தான். முதல்வர் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று கேட்டுக் கொண்டார்.

திருமாவளவனின் மது ஒழிப்பு மாநாடு குறித்து கருத்து தெரிவித்த அவர், "10 வருடம் திமுக கூட்டணியில் இருந்து கொண்டு இப்போதாவது மது ஒழிப்பை திருமாவளவன் ஏற்றுக் கொண்டுள்ளார். திருமாவளவன் மது ஒழிப்பு மாநாட்டுக்கு எங்களை அழைக்கட்டும், அதில் கலந்து கொள்வது குறித்து அப்போது பார்க்கலாம்," என்றார்.

மேலும் அவர், "தமிழக அரசு சாராயத்தில் கவனம் செலுத்தாமல் ஏரிகளைப் பாதுகாக்க வேண்டும், தண்ணீரை சேமிக்க நிதி ஒதுக்க வேண்டும்," என்று கேட்டுக் கொண்டார். "மாணவர்களுக்கு நீதி போதனை மிகவும் அவசியம். அதில் நல்லது இருக்கிறது. குறிப்பாக சமூக சீர்கேடு விஷயங்கள், எது நல்லது, எது கெட்டது என்பதை மாணவர்களுக்கு கற்றுத் தர வேண்டும்," என்றும் தெரிவித்தார்.

விஜய் மாநாட்டுக்கு அனுமதி அளிப்பது குறித்த கேள்விக்கு, "யார் மாநாடு நடத்தினாலும் காவல்துறையினர் இவ்வளவு கேள்விகள் கேட்பார்கள். இது ஒன்றும் பெரிய விஷயமில்லை," என்று அன்புமணி ராமதாஸ் பதிலளித்தார்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...