சேலம் ரயில்வே கோட்டத்தின் முதல் 5 ரயில் நிலையங்கள்: கோவை முதலிடம்

சேலம் ரயில்வே கோட்டத்தில் 2023-24 ஆம் ஆண்டில் பயணிகள் எண்ணிக்கை மற்றும் வருவாய் அடிப்படையில் முதல் 5 இடங்களைப் பிடித்த ரயில் நிலையங்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.


கோவை: தென்னக ரயில்வேயின் சேலம் கோட்டத்தில் 2023-24 ஆம் நிதியாண்டில் பயணிகள் எண்ணிக்கை மற்றும் வருவாய் ஈட்டுதலில் முதல் 5 இடங்களைப் பிடித்த ரயில் நிலையங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் கோயம்புத்தூர் ரயில் நிலையம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கோவை ரயில் நிலையத்தில் 1.02 கோடி பயணிகள் பயணித்துள்ளனர். இதன் மூலம் ரூ.345 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

இரண்டாவது இடத்தில் சேலம் ரயில் நிலையம் உள்ளது. இங்கு 44.9 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். இதன் மூலம் ரூ.127 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

மூன்றாவது இடத்தில் ஈரோடு ரயில் நிலையம் உள்ளது. இங்கு 43 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். இதன் மூலம் ரூ.111 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

நான்காவது இடத்தில் திருப்பூர் ரயில் நிலையம் உள்ளது. இங்கு 39 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். இதன் மூலம் ரூ.96 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

ஐந்தாவது இடத்தில் கரூர் ரயில் நிலையம் உள்ளது. இங்கு 9.69 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். இதன் மூலம் ரூ.18 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

Newsletter

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...