டிசம்பர் 31, 2024-க்குள் 2000-க்கு முந்தைய பிறப்புகளை பதிவு செய்ய வேண்டுகோள் - கோவை மாநகராட்சி ஆணையர்

கோவை மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் 2000-க்கு முந்தைய பிறப்புகளை டிசம்பர் 31, 2024-க்குள் பதிவு செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த காலக்கெடுவுக்குப் பிறகு பெயர் பதிவு செய்ய இயலாது என எச்சரித்துள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் IAS, 2000-ஆம் ஆண்டிற்கு முந்தைய பிறப்புகளை பதிவு செய்வது தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

பிறப்பு மற்றும் இறப்பு புதுப்பிக்கப்பட்ட பதிவுச்சட்டம் 2000-ன் விதிகளின்படி, 2000-ம் ஆண்டிற்கு முந்தைய பிறப்புகளை டிசம்பர் 31, 2024-க்குள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த காலக்கெடுவுக்குப் பிறகு 2000-க்கு முந்தைய பிறப்புகளை நிரந்தரமாக பதிவு செய்ய இயலாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மாநில அரசால் 25 ஆண்டுகள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், இனி மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017-ம் ஆண்டு வரை பிறந்த குழந்தைகளின் பெயருடன் பிறப்பு சான்றிதழ் பெற கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டும். 2017-க்குப் பிறகு பிறந்த குழந்தைகளுக்கு, குழந்தை பிறந்த இடம் சார்ந்த வார்டு அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் போது, குழந்தையின் பெயர் மற்றும் பிறந்த தேதி கொண்ட ஏதேனும் ஒரு ஆவணம் (பள்ளி மதிப்பெண் சான்றிதழ் / பள்ளி மாற்றுச் சான்றிதழ் / நற்சான்றிதழ் போன்றவை) சமர்ப்பிக்க வேண்டும். மேலும், பெயர் பதிவு கால தாமத விண்ணப்பக் கட்டணமும் செலுத்த வேண்டும்.

நடப்பாண்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு வருடத்திற்குள் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அலுவலகத்தில் குழந்தையின் பெயரை கால தாமத பதிவுக் கட்டணமின்றி பதிவு செய்யலாம் என்றும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முக்கிய அறிவிப்பை மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் IAS வெளியிட்டுள்ளார்.

Newsletter

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...