கவுண்டம்பாளையம் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்: வரும் தேர்தலில் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் - ஆ.ரவி

கோவை கவுண்டம்பாளையத்தில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட செயலாளர் ஆ.ரவி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, வரும் சட்டமன்ற தேர்தலில் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.



கோவை: கோவை கவுண்டம்பாளையம் அடுத்துள்ள டி.வி.எஸ் நகர் செல்லும் சாலையிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் கவுண்டம்பாளையம் பகுதி திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. 



இந்தக் கூட்டத்திற்கு பகுதி செயலாளர் J.S. சரத்விக்னேஷ் தலைமை வகித்தார்.



கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ஆ.ரவி பேசும்போது, "நாடாளுமன்ற தேர்தலில் கவுண்டம்பாளையம் தொகுதியில் மட்டும் 25 ஆயிரம் ஓட்டுகள் அதிகம் பெற்றோம். அதேபோல வரும் 2026 சட்டமன்ற தேர்தலிலும் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற இப்போது இருந்து தீவிரமாக செயல்பட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.



இந்தக் கூட்டத்தில் திமுக மூத்த முன்னோடிகளுக்கு கேடயம் வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். மேலும் அதிமுக நகர மாணவர் அணி இணை செயலாளர் கனகராஜ் அனைவரது முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

கூட்டத்தில் முன்னாள் எம்.பி. நாகராஜ், மாவட்ட துணை செயலாளர் அசோக்பாபு ஆறுக்குட்டி. தலைமை செயற்குழு உறுப்பினர் TP சுப்பிரமணியன், மாநில மகளிரணி துணை செயலாளர் மாலதி நாகராஜ், முன்னாள் நகராட்சி தலைவர் சுந்தரம், முன்னாள் பொறுப்புக் குழு உறுப்பினர் ஜவஹர், அவைத் தலைவர் சண்முகசுந்தரம், துணை செயலாளர்கள் சங்கர், ஈஸ்வரன், கண்ணகி. பொருளாளர் வசந்தகுமார், மாவட்ட பிரதிநிதிகள் லோகநாதன், கல்யாணசுந்தரம், சுனில்குமார், பிரபாகரன், வட்ட செயலாளர்கள் குட்டி வேலுச்சாமி.ரமணன், தனராஜ், காளிதாஸ், குமரேசன், மாமன்றஉறுப்பினர்கள் தமிழ்செல்வன், சுபஸ்ரீ சரத், கிருஷ்ணமூர்த்தி, சம்பத், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மனோஜ் மற்றும் அணி நிர்வாகிகள் ஹரிஸ், டாக்டர் கனேஷ்குமார், செந்தில் மூர்த்தி, சரண்யா, சதீஸ்குமார், பரமசிவம் BLA2 வட்ட கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

கூட்டத்தில் அ.தி.மு.க நகர மாணவர் அணி இணை செயலாளர் கனகராஜ் தி.மு.கவில் அனைவர் முன்னிலையிலும் தன்னை இணைத்துக்கொண்டார்.



கூட்டத்தின் இறுதியில் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...