உடுமலையில் வாக்குச்சாவடி மறுசீரமைப்பு குறித்து அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம்

உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிகளின் வாக்குச்சாவடி மறுசீரமைப்பு குறித்து அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. புதிய வாக்குச்சாவடிகள் அமைத்தல், இடமாற்றம் செய்தல் போன்ற முக்கிய விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன.



Coimbatore: உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குச்சாவடி மறுசீரமைப்பு குறித்து அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு மற்றும் பகுப்பாய்வு குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்திற்கு ஆர்.டி.ஓ நேர்முக உதவியாளர் ஜலஜா தலைமை வகித்தார். உடுமலை சட்டமன்றத் தொகுதியில் கள்ளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியை மாற்றுவதற்கும், சூளேஸ்வரன்பட்டியில் உள்ள வாக்குச்சாவடிகளை பிரிப்பதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது.



மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் ருத்ராபாளையம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியை இரண்டாகப் பிரிப்பதற்கும், குப்பம்பாளையம் பகுதியில் புதிய வாக்குச்சாவடி அமைப்பதற்கும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

உடுமலை சட்டமன்ற தொகுதியில் 294 வாக்குச்சாவடிகளில் 2,64,414 வாக்காளர்களும், மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் 287 வாக்குச்சாவடிகளில் 2,36,059 வாக்காளர்களும் உள்ளனர்.

இந்த நிகழ்வில் மடத்துக்குளம் தாசில்தார் பானுமதி, தேர்தல் துணை தாசில்தார்கள் சையது ராபியம்மாள், வளர்மதி, உடுமலை நகர பாஜக தலைவர் கண்ணாயிரம், திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன், உடுமலை நகர காங்கிரஸ் தலைவர் கோ. ரவி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதி கிருஷ்ணசாமி, பகுஜன் சமாஜ் கட்சி பிரதிநிதி கிருபாகரன், திமுக மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...

நாளை பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்...

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...