உடுமலையில் வாக்குச்சாவடி மறுசீரமைப்பு குறித்து அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம்

உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிகளின் வாக்குச்சாவடி மறுசீரமைப்பு குறித்து அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. புதிய வாக்குச்சாவடிகள் அமைத்தல், இடமாற்றம் செய்தல் போன்ற முக்கிய விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன.



Coimbatore: உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குச்சாவடி மறுசீரமைப்பு குறித்து அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு மற்றும் பகுப்பாய்வு குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்திற்கு ஆர்.டி.ஓ நேர்முக உதவியாளர் ஜலஜா தலைமை வகித்தார். உடுமலை சட்டமன்றத் தொகுதியில் கள்ளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியை மாற்றுவதற்கும், சூளேஸ்வரன்பட்டியில் உள்ள வாக்குச்சாவடிகளை பிரிப்பதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது.



மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் ருத்ராபாளையம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியை இரண்டாகப் பிரிப்பதற்கும், குப்பம்பாளையம் பகுதியில் புதிய வாக்குச்சாவடி அமைப்பதற்கும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

உடுமலை சட்டமன்ற தொகுதியில் 294 வாக்குச்சாவடிகளில் 2,64,414 வாக்காளர்களும், மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் 287 வாக்குச்சாவடிகளில் 2,36,059 வாக்காளர்களும் உள்ளனர்.

இந்த நிகழ்வில் மடத்துக்குளம் தாசில்தார் பானுமதி, தேர்தல் துணை தாசில்தார்கள் சையது ராபியம்மாள், வளர்மதி, உடுமலை நகர பாஜக தலைவர் கண்ணாயிரம், திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன், உடுமலை நகர காங்கிரஸ் தலைவர் கோ. ரவி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதி கிருஷ்ணசாமி, பகுஜன் சமாஜ் கட்சி பிரதிநிதி கிருபாகரன், திமுக மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...