அன்னூரில் அவிநாசி அத்திகடவு திட்டக் குழாய் உடைப்பு: வீணாகும் தண்ணீர்

அன்னூர் அருகே அல்லிக்குளம் ஊராட்சியில் அவிநாசி அத்திகடவு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாவதாக புகார். விவசாயிகள் தரமான குழாய்கள் அமைக்க கோரிக்கை.



Coimbatore: கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள அல்லிக்குளம் ஊராட்சியில் அவிநாசி அத்திகடவு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாவதாக புகார் எழுந்துள்ளது.

அல்லிக்குளம் ஊராட்சியில் உள்ள அல்லி குளம் சுமார் 20 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த குளத்தில் அண்மையில் அவிநாசி அத்திகடவு திட்டம் மூலம் தண்ணீர் நிரப்ப குழாய்கள் பதிக்கப்பட்டு தண்ணீர் வழங்கப்பட்டது.

திட்டம் நிறைவேற்றப்பட்டு குளத்திற்கு தண்ணீர் வர தொடங்கி ஒரு மாதத்திற்குள் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பீய்ச்சி அடித்து செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சில இடங்களில் தண்ணீர் சாலைகளிலும் வீணாக செல்கிறது. தரமான குழாய்கள் பதிலாக சாதாரண குழாய்கள் அமைக்கப்பட்டதால் அவ்வப்போது இந்த திட்டத்தில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது.

நீண்ட நாட்களாக எப்போது தண்ணீர் வரும் என காத்திருந்த நிலையில், தற்போது வரும் தண்ணீரும் வீணாவதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். தரமற்ற முறையில் உள்ள குழாய்களை மாற்றி தண்ணீர் வீணாவதை அதிகாரிகள் தடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தற்போது அல்லி குளம் பகுதியில் குழாய் உடைப்பின் வீடியோ காட்சிகள் அந்த கிராம மக்களால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இந்த புகார்களை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...