மேட்டுப்பாளையம் அருகே கார் விபத்து: தீயில் சிக்கி ஓட்டுநர் பரிதாப உயிரிழப்பு

மேட்டுப்பாளையம் அருகே அன்னூர் சாலையில் அதிவேக கார் பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் தீப்பிடித்த காரில் சிக்கி ஓட்டுநர் உயிரிழந்தார். சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Coimbatore: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே அன்னூர் சாலையில் நேற்று நள்ளிரவு சுமார் 12 மணியளவில் பயங்கர விபத்து ஒன்று நடந்தது. அதிவேகமாக வந்த கார் ஒன்று தென்திருப்பதி நால்ரோடு பகுதியில் உள்ள குளிர்பதன கிடங்கு அருகே உள்ள பாலத்தின் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது.

விபத்துக்குள்ளான கார் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. காரின் ஓட்டுநர் இருக்கையில் சிக்கிக் கொண்ட நிலையில், தீ பிடித்து எரிந்த காரிலிருந்து வெளியேற முடியாமல் தவித்தார். இதனால் உடல் கருகி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.



தகவல் அறிந்ததும், மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுந்தரம் தலைமையிலான தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். காரில் பிடித்த தீ அருகிலுள்ள வீடுகளுக்கும் பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. தீயணைப்பு வீரர்கள் தீவிர முயற்சி எடுத்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் உயிரிழந்தவர் சிறுமுகை அருகே உள்ள கோவிந்தனூரை சேர்ந்த நவீன்குமார் என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...