கோவை குற்றப்பிரிவு டி.எஸ்.பி. மீது கட்டப்பஞ்சாயத்து குற்றச்சாட்டு: வியாபாரி பரபரப்பு புகார்

கோவையில், தேங்காய் வியாபாரி பிரகாஷ், மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. தன்மீது போலி வழக்குகள் பதிந்து கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி மேற்கு மண்டல காவல்துறை தலைவர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.



கோவை: கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் அலுவலகத்தில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியைச் சேர்ந்த தேங்காய் வியாபாரி பிரகாஷ் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.



தன்மீது போலியான வழக்குகள் பதியப்பட்டிருப்பதாகவும் கோவை மாவட்ட குற்றபிரிவு டி.எஸ்.பி கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவதாகவும் செய்தியாளர்களிடம் குற்றம் சாட்டினார்.



பிரகாஷ் கூறியதாவது: "குமரவேல் மற்றும் ரவிகுமார் என்பவர்களுடன் நீண்டகாலமாக கொப்பரை மற்றும் தேங்காய் வியாபாரம் செய்து வந்தேன். குமரவேல் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாக கூறி என்னிடம் வாங்கிய பணத்தை திருப்பித் தராமல் தலைமறைவாகிவிட்டார். குமரவேல் மற்றும் ரவிகுமார் குறித்து விசாரித்ததில் இருவரும் பலரிடம் பணம் பெற்றிருப்பது தெரியவந்தது."

"இந்நிலையில் குமரவேல் மற்றும் ரவிகுமார் ஆகியோர் கோவை மாவட்ட குற்றப்பிரிவில் சில அதிகாரிகளின் துணையுடன் என் மீது போலி புகார்கள் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக கோவை மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி.யிடம் நேரில் ஆஜராகி அனைத்து ஆவணங்களையும் சமர்பித்தேன். ஆனால் டி.எஸ்.பி. அதனை ஏற்காமல் காலதாமதம் செய்வதோடு பணத்தை செட்டில்மெண்ட் செய்யச்சொல்லி கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுகிறார்," என்று பிரகாஷ் குற்றம்சாட்டினார்.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழக காவல்துறை தலைவரை சந்தித்து புகார் அளித்துள்ளதாகவும், தற்போது மேற்கு மண்டல காவல்துறை தலைவரையும் நேரில் சந்தித்து புகாரளிக்க வந்ததாகவும் பிரகாஷ் தெரிவித்தார்.

"வியாபாரிகளை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதை கட்டுப்படுத்தவில்லை என்றால் எங்களைப் போன்ற வியாபாரிகள் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை," என்று பிரகாஷ் வேதனையுடன் தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...