கோவை மாநகராட்சி பள்ளியில் மாணவர் தேர்தல்: மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் வாக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவர் தலைவர் தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் நடைபெற்றது. 550 மாணவர்கள் மற்றும் மூன்று ஆசிரியர்கள் வாக்களித்தனர்.



கோவை: கோயம்புத்தூர், மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் இன்று பள்ளி மாணவர் தலைவர் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலமாக நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் 9 மாணவர்கள் வேட்பாளராக போட்டியிட்டனர். மொத்தம் 550 மாணவர்கள் மற்றும் மூன்று ஆசிரியர்கள் வாக்களித்தனர்.

மசக்காளிபாளையம் பள்ளியில் ஆண்டுதோறும் பள்ளி மாணவர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த ஆண்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் கோயம்புத்தூர் ராக் அமைப்பின் நிதி உதவியுடன் வடிவமைக்கப்பட்டது. கடந்த வாரத்திலேயே மாணவர்களுக்கு இதில் வாக்களிக்கும் முறை விளக்கப்பட்டது.

இந்த தேர்தல் முறை மூலம் மாணவர்கள் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்கும் வழிமுறைகளை அறிவதோடு, மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் எவ்வாறு செயல்படுகிறது, எவ்வாறு வாக்களிப்பது போன்ற வழிமுறைகளையும் அறிந்து கொள்கின்றனர்.



எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரையிலான 500க்கும் மேலான மாணவர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். தேர்தல் நடத்தும் அலுவலர்களாக மாணவர்களே செயல்பட்டனர். வேட்புமனுத் தாக்கல், பிரச்சாரம் என அனைத்துமே பொதுத்தேர்தலில் இருப்பது போல கடைப்பிடிக்கப்பட்டன.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...