குனியமுத்தூரில் பார்க் அவென்யூ பூங்காவில் யோகா மற்றும் கராத்தே பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

குனியமுத்தூர் 87வது வார்டில் உள்ள பார்க் அவென்யூ பூங்காவில் யோகா மற்றும் கராத்தே பயிற்சி வகுப்புகளின் தொடக்க விழா 07-09-24 அன்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது. பல்வேறு சங்கத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Coimbatore: குனியமுத்தூர் 87வது வார்டுக்கு உட்பட்ட பார்க் அவென்யூ பூங்காவில் யோகா மற்றும் கராத்தே பயிற்சி வகுப்புகளின் தொடக்க விழா நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி செப்டம்பர் 7ஆம் தேதி மாலை 5 மணிக்கு தொடங்கியது.

நிகழ்ச்சிக்கு பார்க் அவென்யூ சங்கத் தலைவர் திரு. சாமுவேல் ஞான கடாட்சம் தலைமை வகித்தார். சாய் கார்டன் குடியிருப்பு சங்கத் தலைவரும், ஒன்றிணைந்த சங்கத்தின் துணைத் தலைவருமான திரு. ஷரீப் அறிமுக உரையாற்றி வரவேற்றார்.



காவல் உதவி ஆணையர் திரு. அஜய் தங்கம் மற்றும் 87வது வார்டு கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் திரு. சதாசிவம் ஆகியோர் சிறப்புரை வழங்கினர். அன்னமா நாயக்கர் வீதி ஒன்றிணைந்த குடியிருப்பு சங்கத்தின் தலைவர் திரு. அப்துல் ஹக்கீமும் உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. குனியமுத்தூர் காவல் ஆய்வாளர் திரு. பாஸ்கரனும் கலந்து கொண்டார். தேநீர் மற்றும் சிற்றுண்டி வழங்கும் பொறுப்பை திரு. ஹக்கீம் ஏற்றுக்கொண்டார்.



பார்க் அவென்யூ குடியிருப்பு சங்க அமைப்பாளர் திரு. இக்பால் நன்றியுரை வழங்கினார். யோகா மற்றும் கராத்தே பயிற்சி வகுப்புகளுக்கு திரு. சரீப் (தொடர்பு எண்: 9043997132) பயிற்சியாளராக இருப்பார் என அறிவிக்கப்பட்டது.



இந்த தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னமா நாயக்கர் வீதி ஒன்றிணைந்த குடியிருப்பு சங்கத்தின் தலைவர் திரு. அப்துல் ஹக்கீம் நன்றி தெரிவித்தார்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...