விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்: நீலகிரி சுற்றுலா செல்பவர்கள் மதியம் 2 மணிக்குள் கோவை திரும்ப காவல்துறை அறிவுறுத்தல்

மேட்டுப்பாளையத்தில் இன்று நடைபெறும் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலத்தை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா செல்பவர்கள் மதியம் 2 மணிக்குள் கோவை திரும்ப காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.


Coimbatore: மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் இன்று (செப்டம்பர் 9) நடைபெறவுள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா சென்றவர்கள் மதியம் 2 மணிக்குள் கோவை திரும்ப போலீசார் நேற்று (செப்டம்பர் 8) அறிவுறுத்தியுள்ளனர்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் நகரில் இந்து முன்னணி சார்பில் 85 இடங்களிலும், காரமடையில் 140 இடங்களிலும், சிறுமுகையில் 35 இடங்களிலும், அன்னூரில் 40 இடங்களிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

காரமடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் கண்ணார்பாளையத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு தேக்கம்பட்டி பகுதியில் உள்ள பவானி ஆற்றில் திங்கள்கிழமை விசர்ஜனம் செய்யப்படவுள்ளன. சிறுமுகை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் பழத்தோட்டம் பகுதியிலும், அன்னூர், அவிநாசி தாலுகா பகுதிகளில் வைக்கப்பட்ட சிலைகள் சிறுமுகை எல்லாப்பாளையம் பகுதியிலும் விசர்ஜனம் செய்யப்படும்.

மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வைக்கப்பட்ட சிலைகள் மேட்டுப்பாளையம்-கோவை சாலையில் சி.டி.சி. டிப்போ அருகில் மதியம் 1 மணியளவில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கரைக்கப்படும். இதன் காரணமாக, மேட்டுப்பாளையம்-உதகை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா சென்றுள்ள மக்கள், தங்களது பயணங்களை இதற்கு ஏற்றார்போல மாற்றிக் கொள்ள வேண்டும் என்று காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வருபவர்கள், கோவை விமான நிலையத்துக்கு செல்பவர்கள் மதியம் 2 மணிக்குள் கோவை திரும்பி போக்குவரத்து நெரிசல் இன்றி பயணிக்கலாம் என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...