விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்: நீலகிரி சுற்றுலா செல்பவர்கள் மதியம் 2 மணிக்குள் கோவை திரும்ப காவல்துறை அறிவுறுத்தல்

மேட்டுப்பாளையத்தில் இன்று நடைபெறும் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலத்தை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா செல்பவர்கள் மதியம் 2 மணிக்குள் கோவை திரும்ப காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.


Coimbatore: மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் இன்று (செப்டம்பர் 9) நடைபெறவுள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா சென்றவர்கள் மதியம் 2 மணிக்குள் கோவை திரும்ப போலீசார் நேற்று (செப்டம்பர் 8) அறிவுறுத்தியுள்ளனர்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் நகரில் இந்து முன்னணி சார்பில் 85 இடங்களிலும், காரமடையில் 140 இடங்களிலும், சிறுமுகையில் 35 இடங்களிலும், அன்னூரில் 40 இடங்களிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

காரமடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் கண்ணார்பாளையத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு தேக்கம்பட்டி பகுதியில் உள்ள பவானி ஆற்றில் திங்கள்கிழமை விசர்ஜனம் செய்யப்படவுள்ளன. சிறுமுகை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் பழத்தோட்டம் பகுதியிலும், அன்னூர், அவிநாசி தாலுகா பகுதிகளில் வைக்கப்பட்ட சிலைகள் சிறுமுகை எல்லாப்பாளையம் பகுதியிலும் விசர்ஜனம் செய்யப்படும்.

மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வைக்கப்பட்ட சிலைகள் மேட்டுப்பாளையம்-கோவை சாலையில் சி.டி.சி. டிப்போ அருகில் மதியம் 1 மணியளவில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கரைக்கப்படும். இதன் காரணமாக, மேட்டுப்பாளையம்-உதகை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா சென்றுள்ள மக்கள், தங்களது பயணங்களை இதற்கு ஏற்றார்போல மாற்றிக் கொள்ள வேண்டும் என்று காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வருபவர்கள், கோவை விமான நிலையத்துக்கு செல்பவர்கள் மதியம் 2 மணிக்குள் கோவை திரும்பி போக்குவரத்து நெரிசல் இன்றி பயணிக்கலாம் என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...