மேட்டுப்பாளையம் அருகே கிராமத்தில் புகுந்த காட்டு யானை: பொதுமக்கள் வணங்கி அனுப்பிய சம்பவம்

மேட்டுப்பாளையம் அருகே ஊமப்பாளையம் கிராமத்தில் காட்டு யானை புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் யானையை வணங்கி அனுப்பிய சம்பவம் நடந்தது. வனத்துறையினர் யானையை காட்டுக்குள் விரட்டினர்.



Coimbatore: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஊமப்பாளையம் கிராமத்தில் காட்டு யானை புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள், யானையை வணங்கி அனுப்பிய சம்பவம் நடந்தது.

மேட்டுப்பாளையம், சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் காட்டு யானைகள் மற்றும் பிற வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள், அருகிலுள்ள கிராமங்களின் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.



நேற்று இரவு, கல்லாறு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் கோத்தகிரி சாலையைக் கடந்து சிறுமுகை வனச் சரகத்துக்கு உட்பட்ட ஓடந்துறை காப்பு காடு பகுதிக்கு சென்றன. இதில் 'பாகுபலி' என அழைக்கப்படும் ஒரு காட்டு யானை மட்டும் வனப்பகுதிக்குள் செல்லாமல், மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஊமப்பாளையம் கிராமத்தில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் புகுந்தது.

திடீரென யானையைக் கண்ட கிராம மக்கள் அச்சமடைந்தனர். சிலர் சத்தமிட்டு யானையை விரட்ட முயன்றனர். அப்போது, கூட்டத்திலிருந்த ஒரு பெண், "சாமி என்று கையெடுத்து கும்பிடு, யானை போய்விடும்" என்று கூறினார். உடனே அங்கிருந்த பெண்கள் அனைவரும் "சாமி போய்விடு" என்று யானையைப் பார்த்து வணங்கினர்.

இதனைக் கேட்ட யானை, முன்னோக்கி வராமல் அப்படியே நின்று கொண்டிருந்தது. இச்சம்பவம் குறித்து சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் விரைந்து வந்து, பாகுபலி காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் கிராமத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...