சூலூரில் தொடர் திருட்டு: மூன்று பேர் கைது, 19 சவரன் தங்க நகைகள் பறிமுதல்

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் நடந்த தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 19 சவரன் தங்க நகைகள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம், சூலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அண்மையில் நடந்த தொடர் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக சூலூர் காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைவாக கண்டுபிடிக்க வேண்டும் என்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின் பேரில், கருமத்தம்பட்டி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளரின் தலைமையில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த குழு தீவிர புலனாய்வு நடத்தியதோடு, முன்னாள் குற்றவாளிகளையும் விசாரணைக்கு உட்படுத்தினர்.

விசாரணையின் போது, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இம்ரான் (36), அபுதாகிர் (36) மற்றும் ஹக்கீம் (40) ஆகிய மூவரும் சந்தேகத்திற்குரியவர்களாக அடையாளம் காணப்பட்டனர். மேலும் விசாரணையில், இவர்கள் பல குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது தெரிய வந்தது.

தனிப்படை காவலர்கள் இந்த மூன்று நபர்களையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, சூலூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த நான்கு வழக்குகளுடன் தொடர்புடைய 19 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் செப்டம்பர் 7 அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கைது நடவடிக்கை சூலூர் பகுதியில் நிலவிய பாதுகாப்பின்மை உணர்வை குறைத்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...