கோவையில் பாறு கழுகுகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாகனப் பிரசாரம் தொடக்கம்

கோவையில் பாறு கழுகுகள் தினத்தையொட்டி, எம்பி கணபதி ப.ராஜ்குமார் மற்றும் மேயர் கா.ரங்கநாயகி ஆகியோர் விழிப்புணர்வு வாகனப் பிரசாரத்தை தொடங்கி வைத்தனர். இந்த பிரசாரம் கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கி 800 கி.மீ. தொலைவு பயணிக்கும்.


கோவை: கோவையில் பாறு கழுகுகள் தினத்தையொட்டி வாகன விழிப்புணர்வு பிரசாரம் செப்டம்பர் 7 அன்று தொடங்கியது. கோவை மக்களவை உறுப்பினர் கணபதி ப.ராஜ்குமார் மற்றும் மாநகராட்சி மேயர் கா.ரங்கநாயகி ஆகியோர் இந்த பிரசாரத்தை தொடங்கி வைத்தனர்.

ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தின் முதல் சனிக்கிழமை பாறு கழுகுகள் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது.



இதையொட்டி, அருளகம் அமைப்பின் சார்பில் இந்த விழிப்புணர்வு வாகனப் பிரசாரம் ஏற்பாடு செய்யப்பட்டது. கோவை வஉசி பூங்காவிலிருந்து தொடங்கிய இந்த வாகனப் பிரசாரத்தை எம்பி கணபதி ப.ராஜ்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் தமிழக அரசு கானுயிர் வாரிய உறுப்பினர் ஓசை கே.காளிதாசன் மற்றும் திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநிலத்துணைத் தலைவர் நா.மணிசுந்தர் ஆகியோர் பாறு கழுகுகள் இனத்தை பாதுகாப்பதன் அவசியம் குறித்து பேசினர்.



அருளகம் அமைப்பின் நிறுவனர் சு. பாரதிதாசன் கூறுகையில், "தமிழகம் முழுக்க வலம் வந்த பாறு கழுகு பறவைகள் தற்போது கோவை, நீலகிரி, முதுமலையை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் தஞ்சமடைந்து சொற்ப எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றன. இவ்வினம் அழிவதற்குப் பெரிதும் காரணமாயிருந்தது இறந்து போன கால்நடைகளில் இருந்த டைக்குளோபினாக் வலி போக்கி மருந்தின் தாக்கம்" என்று தெரிவித்தார்.

மத்திய அரசு டைக்குளோபினாக், அசிக்குளோபினாக், கீட்டோபுரோபேன் ஆகிய மருந்துகளைத் தடை செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும், இறந்த விலங்குகளின் விஷம் தடவப்பட்ட சடலங்களை உண்டதாலும், இறந்த விலங்குகளைப் புதைத்ததால் ஏற்பட்ட உணவுத் தட்டுப்பாட்டின் காரணமாகவும் அதிக அளவில் பாறு கழுகுகள் உயிரிழந்துள்ளதாக அவர் விளக்கினார்.

இந்த வாகனப் பிரசாரம் கோவையில் தொடங்கி ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி தற்போது பாறு கழுகுகள் வலம் வரும் பகுதிகளைச் சுற்றிலும் சுமார் 800 கி.மீ. தொலைவுக்கு செல்ல உள்ளதாக பாரதிதாசன் தெரிவித்தார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...