கோவையில் பாறு கழுகுகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாகனப் பிரசாரம் தொடக்கம்

கோவையில் பாறு கழுகுகள் தினத்தையொட்டி, எம்பி கணபதி ப.ராஜ்குமார் மற்றும் மேயர் கா.ரங்கநாயகி ஆகியோர் விழிப்புணர்வு வாகனப் பிரசாரத்தை தொடங்கி வைத்தனர். இந்த பிரசாரம் கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கி 800 கி.மீ. தொலைவு பயணிக்கும்.


கோவை: கோவையில் பாறு கழுகுகள் தினத்தையொட்டி வாகன விழிப்புணர்வு பிரசாரம் செப்டம்பர் 7 அன்று தொடங்கியது. கோவை மக்களவை உறுப்பினர் கணபதி ப.ராஜ்குமார் மற்றும் மாநகராட்சி மேயர் கா.ரங்கநாயகி ஆகியோர் இந்த பிரசாரத்தை தொடங்கி வைத்தனர்.

ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தின் முதல் சனிக்கிழமை பாறு கழுகுகள் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது.



இதையொட்டி, அருளகம் அமைப்பின் சார்பில் இந்த விழிப்புணர்வு வாகனப் பிரசாரம் ஏற்பாடு செய்யப்பட்டது. கோவை வஉசி பூங்காவிலிருந்து தொடங்கிய இந்த வாகனப் பிரசாரத்தை எம்பி கணபதி ப.ராஜ்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் தமிழக அரசு கானுயிர் வாரிய உறுப்பினர் ஓசை கே.காளிதாசன் மற்றும் திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநிலத்துணைத் தலைவர் நா.மணிசுந்தர் ஆகியோர் பாறு கழுகுகள் இனத்தை பாதுகாப்பதன் அவசியம் குறித்து பேசினர்.



அருளகம் அமைப்பின் நிறுவனர் சு. பாரதிதாசன் கூறுகையில், "தமிழகம் முழுக்க வலம் வந்த பாறு கழுகு பறவைகள் தற்போது கோவை, நீலகிரி, முதுமலையை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் தஞ்சமடைந்து சொற்ப எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றன. இவ்வினம் அழிவதற்குப் பெரிதும் காரணமாயிருந்தது இறந்து போன கால்நடைகளில் இருந்த டைக்குளோபினாக் வலி போக்கி மருந்தின் தாக்கம்" என்று தெரிவித்தார்.

மத்திய அரசு டைக்குளோபினாக், அசிக்குளோபினாக், கீட்டோபுரோபேன் ஆகிய மருந்துகளைத் தடை செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும், இறந்த விலங்குகளின் விஷம் தடவப்பட்ட சடலங்களை உண்டதாலும், இறந்த விலங்குகளைப் புதைத்ததால் ஏற்பட்ட உணவுத் தட்டுப்பாட்டின் காரணமாகவும் அதிக அளவில் பாறு கழுகுகள் உயிரிழந்துள்ளதாக அவர் விளக்கினார்.

இந்த வாகனப் பிரசாரம் கோவையில் தொடங்கி ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி தற்போது பாறு கழுகுகள் வலம் வரும் பகுதிகளைச் சுற்றிலும் சுமார் 800 கி.மீ. தொலைவுக்கு செல்ல உள்ளதாக பாரதிதாசன் தெரிவித்தார்.

Newsletter

பள்ளிகள் திறப்பு: மாணவர் பாதுகாப்புக்கு கோவை காவல்துறை வழிகாட்டுதல்

கோவை மாவட்ட காவல்துறை பள்ளிகள் திறப்பையொட்டி மாணவர் பாதுகாப்பு குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சாலை வித...

சிங்காநல்லூர் தொகுதியில் 'தாயுமானவர்' திட்டம்: முதியவர்களுக்கு வீடு வீடாக ரேஷன் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக ரே...

“நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” - கோவையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையம் வந்தபோது, “நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” உள்ள...

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...