கோவையில் பாறு கழுகுகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாகனப் பிரசாரம் தொடக்கம்

கோவையில் பாறு கழுகுகள் தினத்தையொட்டி, எம்பி கணபதி ப.ராஜ்குமார் மற்றும் மேயர் கா.ரங்கநாயகி ஆகியோர் விழிப்புணர்வு வாகனப் பிரசாரத்தை தொடங்கி வைத்தனர். இந்த பிரசாரம் கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கி 800 கி.மீ. தொலைவு பயணிக்கும்.


கோவை: கோவையில் பாறு கழுகுகள் தினத்தையொட்டி வாகன விழிப்புணர்வு பிரசாரம் செப்டம்பர் 7 அன்று தொடங்கியது. கோவை மக்களவை உறுப்பினர் கணபதி ப.ராஜ்குமார் மற்றும் மாநகராட்சி மேயர் கா.ரங்கநாயகி ஆகியோர் இந்த பிரசாரத்தை தொடங்கி வைத்தனர்.

ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தின் முதல் சனிக்கிழமை பாறு கழுகுகள் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது.



இதையொட்டி, அருளகம் அமைப்பின் சார்பில் இந்த விழிப்புணர்வு வாகனப் பிரசாரம் ஏற்பாடு செய்யப்பட்டது. கோவை வஉசி பூங்காவிலிருந்து தொடங்கிய இந்த வாகனப் பிரசாரத்தை எம்பி கணபதி ப.ராஜ்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் தமிழக அரசு கானுயிர் வாரிய உறுப்பினர் ஓசை கே.காளிதாசன் மற்றும் திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநிலத்துணைத் தலைவர் நா.மணிசுந்தர் ஆகியோர் பாறு கழுகுகள் இனத்தை பாதுகாப்பதன் அவசியம் குறித்து பேசினர்.



அருளகம் அமைப்பின் நிறுவனர் சு. பாரதிதாசன் கூறுகையில், "தமிழகம் முழுக்க வலம் வந்த பாறு கழுகு பறவைகள் தற்போது கோவை, நீலகிரி, முதுமலையை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் தஞ்சமடைந்து சொற்ப எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றன. இவ்வினம் அழிவதற்குப் பெரிதும் காரணமாயிருந்தது இறந்து போன கால்நடைகளில் இருந்த டைக்குளோபினாக் வலி போக்கி மருந்தின் தாக்கம்" என்று தெரிவித்தார்.

மத்திய அரசு டைக்குளோபினாக், அசிக்குளோபினாக், கீட்டோபுரோபேன் ஆகிய மருந்துகளைத் தடை செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும், இறந்த விலங்குகளின் விஷம் தடவப்பட்ட சடலங்களை உண்டதாலும், இறந்த விலங்குகளைப் புதைத்ததால் ஏற்பட்ட உணவுத் தட்டுப்பாட்டின் காரணமாகவும் அதிக அளவில் பாறு கழுகுகள் உயிரிழந்துள்ளதாக அவர் விளக்கினார்.

இந்த வாகனப் பிரசாரம் கோவையில் தொடங்கி ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி தற்போது பாறு கழுகுகள் வலம் வரும் பகுதிகளைச் சுற்றிலும் சுமார் 800 கி.மீ. தொலைவுக்கு செல்ல உள்ளதாக பாரதிதாசன் தெரிவித்தார்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...