மடத்துக்குளம் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்ற ஒடிசா இளைஞர் கைது

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்ற ஒடிசாவைச் சேர்ந்த 34 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார். போலீசார் 3.2 கிலோ கஞ்சா சாக்லேட்டை பறிமுதல் செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த ஒடிசாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மடத்துக்குளம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தாராபுரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் ஆய்வாளர் சாந்தி தலைமையில் போலீசார் மடத்துக்குளம் பகுதியில் சோதனை நடத்தினர்.



செங்கழனி புதூர் பஸ் நிறுத்தம் அருகே நடத்தப்பட்ட சோதனையின் போது, ஒடிசாவைச் சேர்ந்த பாசுதேப் பால் (34) என்ற இளைஞரின் பையில் கஞ்சா சாக்லேட் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பாசுதேப் பாலிடமிருந்து 3.2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...