தாராபுரம் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து ஓட்டுநர்களின் அராஜகம் - வைரலாகும் வீடியோ

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துக்கு வழி விடாமல் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் அராஜகம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துக்கு வழி விடாமல் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் அராஜகம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தாராபுரம் அரசு போக்குவரத்து கழக கிளை பேருந்து ஒன்று, கரூர் செல்வதற்காக தாராபுரம் பேருந்து நிலையத்திற்கு வந்தது. அப்போது, தாராபுரம் முதல் கரூர் வரை செல்லும் தனியார் பேருந்து (TN 47 V 2005) ஓட்டுநர்கள், அரசு பேருந்துக்கு வழி விடாமல் அராஜகம் செய்தனர். மேலும், மற்றொரு தனியார் பேருந்து (TN 47 AF 9559) உரிமையாளர் கந்தன் என்பவரும் அரசு பேருந்துக்கு வழிமறித்து அராஜகம் செய்தார்.



இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. பேருந்து நிலையத்தில் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்களிடையே இச்சம்பவம் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...