விநாயகர் சதுர்த்தி வழிபாட்டிற்கு கடும் கட்டுப்பாடுகள்: இந்து முன்னணி எச்சரிக்கை

மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டிற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக இந்து முன்னணி குற்றச்சாட்டு. இதேநிலை தொடர்ந்தால் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை.



Coimbatore: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டிற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக இந்து முன்னணி கோவை கோட்ட செயலாளர் ராஜ்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் 300 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. 4 அடி முதல் 12 அடி உயரம் வரை பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.



காலை முதல் சிலைகளுக்கு கணபதி ஹோமம் நடத்தப்பட்டு, விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டைகள் படைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பல இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரண்டு நாட்கள் வழிபாட்டுக்குப் பிறகு, சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் கரைக்கப்பட உள்ளன.

மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே உள்ள சித்தி விநாயகர் ஆலயத்தில் இந்து முன்னணி சார்பில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்குமார், "எப்போதும் இல்லாத வகையில் தமிழ்நாடு அரசும் காவல்துறையும் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டுக்கு கடும் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி சிக்கலை ஏற்படுத்தி வருகின்றனர்" என்று குற்றம்சாட்டினார்.

"விநாயகர் சதுர்த்தி என்பது இந்து முன்னணி விழா அல்ல. பொங்கல், தீபாவளி போன்று அது ஒரு மக்கள் விழாவாக மாறிவிட்டது. எனவே தமிழ்நாடு அரசும் காவல்துறையும் இனிவரும் காலங்களிலாவது தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். தொடர்ந்து சிலை வைக்கவும் வழிபடவும் அனுமதி மறுக்கப்பட்டால் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும்" என இந்து முன்னணி எச்சரித்துள்ளது.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...